எனின்
உனைப்பற்றிய நல்லவைகளை அழித்து,
பழி போடப்பட்டாலும்,
நீ தலைகவிழாமல்
நேராக இருக்கமுடியுமெனின்
உனை அனைவரும் சந்தேகித்தாலும்,
சந்தேகிக்கும் உரிமையையும் கொடுத்து
உன்மீது நம்பிக்கையிழக்காமல்
உன்னால் இருக்கமுடியுமெனின்
காத்திருக்கமுடியுமெனின்,
உன்னால் காத்திருப்பில்
சோர்வடையாமல் இருக்கமுடியுமெனின்
உன்னிடம் பொய்கள் சொல்லப்பட்டாலும்
நீ பொய்களுடன் வாழவில்லையெனின்
உனை வெறுத்தாலும்
நீ பிறரை வெறுக்க வழிகொடாமலிருக்கிறாயெனின்
***
கனவுகள் காணமுடியுமெனினும்
உன் கனவுகள்
உனை அடிமையாக்காமலிருக்குமெனின்
சிந்திக்க முடியுமெனினும்
உன் எண்ணங்கள் மட்டுமே
உனது குறிக்கோள்களில்லையெனின்
வெற்றித்தோல்விகளை
எதிர்கொள்ளவும்
அவற்றை சமமாக பாவிக்கவும் முடியுமெனின்
கபடர்கள்
பைத்தியக்காரர்களுக்கு சூட்சம வலைவிரிக்க
நீ சொன்ன உண்மைகளை
திரித்து கூறுவதை கேட்டும்
மனதிடத்தோடிருக்கமுடியுமெனின்
நீ உயிர்கொடுத்து
உருவாக்கியவைகளைச் சிதைத்து
பின் தரக்குறைவான சீர்கெட்ட பொருட்களால்
அவை மீண்டும் உருவாக்கப்படுவதை பார்த்தும்
நிதானமாயிருக்க முடியுமெனின்
***
உனது மொத்த வெற்றிக்குவியல்களை
இடர்வரவினால் பணையம் வைத்து
அத்தனையும் தோற்று
மீண்டும் ஆரம்பத்திலிருந்து
தொடங்கமுடியுமெனின்
இழந்தவைகளைப் பற்றி
பெருமூச்செறியாமல் இருக்கமுடியுமெனின்
உனக்கென [...]
டிசம்பர், 2006 க்கான தொகுப்பு
எனின்
Posted in Rudyard Kipling, மொழிபெயர்ப்பு on டிசம்பர் 27, 2006 | Leave a Comment »
மோகமுள் – தி. ஜானகிராமன்
Posted in தி. ஜானகிராமன், வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது mogamul, thi.janakiraman on டிசம்பர் 26, 2006 | 3 மறுமொழிகள் »
நூலின் தலைப்பு : மோகமுள்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
விலை : 330/-
பதிப்பகம் : ஐந்திணை
பக்கங்கள் : 686
சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை மூடிவைக்கும் போது மனதை எதுவோ பிடித்து அழுத்தும். இன்று இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் தான் மூடினேன் ஒவ்வொரு முறையும் நள்ளிரவில். மூடிவைத்தப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது அதை பற்றிய சிந்தனைகள் மனதில் அசைபோடும். அந்த கதாபாத்திரங்களில் ஒன்றிவிட்ட ஒர் உணர்வு. வெவ்வேறு கதாபாத்திரங்களில் [...]
இவ்விடம் – சல்மா
Posted in சல்மா, ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது ஒரு மாலையும் இன்னொரு மாலையும், salma on டிசம்பர் 21, 2006 | 3 மறுமொழிகள் »
இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு
எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை
- சல்மா (தொகுப்பு – ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)
The Best Laid Plans – Sidney Sheldon
Posted in Sidney Sheldon, வாசித்த நூல்கள் on டிசம்பர் 20, 2006 | 1 மறுமொழி »
Title : The Best Laid Plans
Author : Sidney Sheldon
Pages : 358 Pages
இக்கதையை ஒரே வாக்கியத்தில் முடித்து விடலாம். காதலித்தவன் (Oliver Russell) தன்னை மணக்காமல் அவனுடைய அரசியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக வேறொருத்தியை மணந்ததால், காதலனை பழிவாங்க துடிக்கிறாள் காதலி (Leslie Stewart). இச்சாதாரண விஷயத்தை எப்படி சுவாரிஸ்யமாக சொல்ல முடியும். அதுதான் ஷெல்டனின் திறமை. மர்மங்களும், போர்களும், திருப்பங்களும் நிறைந்த இக்கதைய படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் இதனுள் மூழ்கிப்போவோம்.
ஒரு விளம்பர அலுவலகத்தில் வேலை [...]
அது குழந்தை – சுந்தர ராமசாமி
Posted in சுந்தர ராமசாமி, ரசித்த கவிதைகள் on டிசம்பர் 19, 2006 | Leave a Comment »
மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
மூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும் குழந்தைப்போல்
மார்பில் அமர்ந்திருந்தது உண்மை
மௌனம் பிடிக்கும் என்றது
யோசனை பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான் என்று சொல்லிச் சிரித்தது
- சுந்தர ராமசாமி (தொகுப்பு – சுந்தர ராமசாமி கவிதைகள்)
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
Posted in ஓஷோ on டிசம்பர் 17, 2006 | 8 மறுமொழிகள் »
நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.
இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?
நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.
இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே [...]
விழித்தெழுக என் தேசம்!
Posted in Rabindranath Tagore, கீதாஞ்சலி, மொழிபெயர்ப்பு, ரசித்த கவிதைகள் on டிசம்பர் 14, 2006 | Leave a Comment »
கீதாஞ்சலி 35
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
விழித்தெழுக என் தேசம்!
———————————
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!
- ஜெயபாரதன் (jayabarat@tnt21.com)
*****************************************
Where the [...]
பெயர் சொல்ல மாட்டேன் – வைரமுத்து
Posted in ரசித்த கவிதைகள், வைரமுத்து on டிசம்பர் 13, 2006 | 4 மறுமொழிகள் »
அமர்களம் படத்தில் வரும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ & ‘மேகங்கள் எனைத் தொட்டுப்போனதுண்டு’ என்ற இரு பாடல்களும் வைரமுத்துவின் ‘தமிழுக்கு நிறம் உண்டு’ என்ற தொகுப்பில் இருக்கும் ‘கேள் மனமே கேள்’ & ‘பெயர் சொல்ல மாட்டேன்’ கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளாகும். இவ்விரு கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்தது ‘பெயர் சொல்ல மாட்டேன்’.
பெயர் சொல்ல மாட்டேன்
———————————-
மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு – சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு [...]
What I have Lived For
Posted in Bertrand Russell, மொழிபெயர்ப்பு on டிசம்பர் 12, 2006 | Leave a Comment »
சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் வாங்கவுமில்லை படிக்கவுமில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் திரு.ஜெயபாரதன் எழுதிய [...]
இதனால் சகலமானவர்களுக்கும் – ரசித்த வரிகள்
Posted in வாசித்த நூல்கள், வைரமுத்து on டிசம்பர் 11, 2006 | Leave a Comment »
இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது. ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான். தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான்.
*****
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் [...]