திரும்பாத முத்தம்
————————————–
இடப் படாத முத்தமொன்று
இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
வந்தமர்ந்தபோது
பனிக் காலத்தின் ஆயிரம்
உறைந்த கண்கள்
அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்
தன் கூச்சத்தின்
இறகுகளைப் படபடவென
அடித்துக்கொண்டது
திசை தப்பி வந்த
வேறொரு உலகத்தின் பறவையென
அன்பின் துயர வெளியின் மேல் அது
பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்கு
தான்
அந்த கணம் வந்தமர்ந்த
இடம் குறித்து
எந்த யோசனையுமில்லை
ஒரு தந்திரமில்லை
ஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்
நான் அதைப் பற்றிக்கொள்ள
விரும்பினேன்
இடப்படாத அந்த [...]
ஆகஸ்ட், 2007 க்கான தொகுப்பு
திரும்பாத முத்தம் – மனுஷ்ய புத்திரன்
Posted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், குறிச்சொல் இடப்பட்டது கடவுளுடன் பிரார்த்தித்தல், manushya puththiran on ஆகஸ்ட் 20, 2007 | 1 மறுமொழி »