அன்பின் மிகுதியால்
ஆர்த்தெழுந்த வன்மக் கசடுகள்
உருவாக்கிக்கொண்டிருக்கும்
தீயில் எரிந்துவிடாமலிருக்க
லாவகமாகத் தள்ளியே இருக்கிறாய்
தானே ஓய்ந்து ஒடுங்கி
அணையும் நேரம் பார்த்து
நீர் கொண்டு வரும் பாவனையில்
நெருங்கி
ஓங்கி எரியவைத்துச்செல்கிறாய்
இப்பொழுது அணைக்கவியலாதெனத்
தெரிந்தும்
அணையும் பாவனையில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
வந்து மழை பொழிவதாக
பொழிந்துவிட்டுச் செல்!
ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு
வன்மக்கசடுகள்
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை on ஆகஸ்ட் 25, 2008 | 5 மறுமொழிகள் »
திணிக்கப்படும் முடிவுகள்
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை on ஆகஸ்ட் 11, 2008 | 5 மறுமொழிகள் »
சிதறிய மழைத்துளிகள்
வான் நோக்கி எழுந்து கொண்டிருந்த
கணத்தில்
விரிந்தெரிய
விளக்கில் ஊற்றிய எண்ணெய்
திரியை மூழ்கடிக்க
அணைக்கப்பட்ட சுடர்
பறந்து வந்து
என்னிடம் ஒளித்துக்கொண்டிருந்தது
திணிக்கப்படும் முடிவுகளை
சுமப்பது எளிதென்று