Posted in அறிவிப்பு, பொது, குறிச்சொல் இடப்பட்டது எட்டுத்திக்கும், மொழிபெயர்ப்பு on ஜூலை 28, 2009 | 7 மறுமொழிகள் »
பலவிதமான தமிழ் வலைப்பதிவுகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை மட்டுமே குறியாகக் கொண்டு ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எட்டுதிக்கும் என்கிற பெயரில் இயங்கும் இத்தளத்தில் மொழிபெயர்ப்பு முன்னொடியான ஏ.கே. ராமானுஜன் அறிமுகத்துடன் இரண்டு சங்கப்பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள நண்பர்கள் இதில் பங்களிக்குமாறு கீழ்கண்ட அறிமுகக் குறிப்பு தரப்பட்டுள்ளது.
அறிமுகம்
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், [...]
முழு பதிவையும் வாசிக்க »
இங்கு சந்தித்து தழுவிக்கொண்ட இரு நண்பர்கள் சென்று விட்டனர் அவரவரின் சொந்த தவறுக்காகவே - W.H.Auden.
இவ்வாசகத்தை முதல் பக்கத்தில் கொண்டு தொடங்கும் கதை இவ்வரிகளையே கதையாகவும் கொண்டுள்ளது. தங்கள் காதலியும் தோழியுமான மோலியின் இறுதிச்சடங்கில் பங்குபெறும் இருநண்பர்கள் அவளின் இறப்பிற்காகவும், சிறிது சிறிதாக அவளின் மூளை செயலிழந்து தான் யார் என்பதையே அறியாமல் இறந்த விதத்திற்காகவும் வருந்துகின்றனர்.
அதற்கு பிறகு தங்களின் உடல் நிலை குறித்து அவர்களுக்கு பயம் எழுகின்றது. தன் காதலி இறந்த நிலையை என்றுமே தானும் சந்திக்கக்கூடாது என்று யோசித்த நண்பர் மற்றொருவரை அழைத்து அப்படி [...]
முழு பதிவையும் வாசிக்க »
எது சரி?எது தவறு? யார் நல்லவர்? யார் கெட்டவர்? எது நிஜம்? எது பொய்? இவற்றை வரையறுப்பது எது? இதற்கான அளவுகோல் என்ன? நீ என்பது இருக்கும் போதுமட்டுமே நான் என்ற ஒன்று இருக்கமுடியும் என்ற சிந்தனையில் இவற்றையும் கொண்டு சென்றால், நிஜம் இருந்தால் மட்டுமே பொய்யும் இருக்க முடியும் என்ற நிலையில் எதுவுமே நிஜமும் இல்லை பொய்யும் இல்லை என்ற சமரசத்தோடு பயணிப்பதே உகந்ததாயும் வசதியாகவும் இருக்கிறது. விலங்குகளையெல்லாம் உடைத்துவிட்டு, உயிர்ப்போடு பறக்கத்துடிக்கும் உயிர்களுக்கெல்லாம் எத்தனை [...]
முழு பதிவையும் வாசிக்க »
“…………மலையின் உச்சியை அடைந்தாலும் மலையின் உச்சியை அடைந்து விட்ட பிரக்ஞை இல்லாமல், வெற்றி அடைய வேண்டுமென்ற வெறியே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும். அது தப்பாகிப்போய்விட்டது…..மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும். – இ.பா”
நகர்ந்துக்கொண்டிருக்கும் அல்லது நகர்த்திக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் சலிப்பு தட்டுகிறது. ஏதோ ஒன்றின் உந்துதலில் மாற்று தேடி அலைகிறது. சிலர் மாற்று என்னவென்று தெளிவாக அறிந்து வைத்துக்கொண்டு அதை நோக்கி தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு அந்த மாற்று என்னவென்றே புரியாத [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 12, 2009 | 4 மறுமொழிகள் »
அடர்கருப்பில் ஊரடங்கி
வான் பூத்து ஒளிரும் நேரம்
துடைத்து மெழுகி
திடமாய் வைத்திருக்கும் பரப்பில்
சாம்பலாய் சுழன்று பரவும்
சக்கர நினைவுகளை
நிறம் மாற்றுமென்
பிரயத்தனங்கள் அறிந்து
அவை
நான் நெருங்கவியலா
மலையடிவார
புற்களினடியில்
தஞ்சம் புகுவதை
ஊறும் எறும்புகள்
பார்த்துச் சிரிக்கின்றன
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 9, 2009 | 7 மறுமொழிகள் »
இதுவும் அதுவுமல்லாத
பிற எதுவாகினும்
அவை நம்மை
இட்டுச்செல்லும்
அருவியின் சாரலுக்கும்
பறவையின் கூட்டிற்கும்
.
.
.
பின்
ஓர் அற்புத
மரணத்திற்கும்
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 8, 2009 | 8 மறுமொழிகள் »
என்றுமே நிறைந்திடாத
உள்ளடுக்குகளின் இருப்பை
எவ்விடுக்குகளிலும்
கசிய விடாது
பத்திரப்படுத்துமென்
விழிப்புணர்வை
அறிந்தே அவளும்
ஊற்றிச்சென்றாள்
அவை
பாறைகளில்
திட்டுத்திட்டாக தேங்கி
காற்றுக்கு தளும்பும்
மழைநீராகின்றது
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவிதையென்றும் சொல்லலாம், குறிச்சொல் இடப்பட்டது கவிதை, kavithai on ஜூலை 7, 2009 | 8 மறுமொழிகள் »
செடிகளும் மரங்களும்
மண்ணரிப்பைத் தடுக்குமென்று
நீரூற்றி
உரமிட்டு
பதமாக வளர்த்த
மரங்களின் கிளைகளை
தன் இருப்பை உணர்த்தியபடி
அசைத்துக்கொண்டிருக்கும் காற்று
கண்ணாடி சன்னல் வழி
பார்த்துக் கொண்டிருக்குமெனக்கு
ரகசியமாய் கூறிற்று
மண்ணிற்கு
எவ்வேரிடத்தும்
அகப்பட்டுவிடாமல்
தான் அலைக்கழிக்கும்
திசை நகர்ந்து கொண்டிருக்க
விருப்பமென்று
முழு பதிவையும் வாசிக்க »