பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
- சித்தர் சிவவாக்கியர்
சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் [...]
‘யுவன் சந்திரசேகர்’ பகுப்புக்கான தொகுப்பு
கூட்டாஞ்சோறு
Posted in கல்யாண்ஜி, சித்தர் பாடல்கள், மனுஷ்ய புத்திரன், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள், விக்ரமாதித்யன் on மே 5, 2008 | 6 மறுமொழிகள் »
பெயரற்ற யாத்ரீகன்
Posted in ஜென் கவிதைகள், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள் on ஜூன் 28, 2007 | 1 மறுமொழி »
சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்
சிறுகச் சிறுக
விடுத்துச் செல்வது
சாம்பலை மட்டுமே
****
நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிகொண்
டிருக்கின்றன
பூச்சிகள், இன்னமும்
****
பாறைக்கருகில் நிற்கும்
ஊசியிலை மரமும் தன்
ஞாபகங்களைக் கொண்டிருக்கிறது
போலும் ; ஓர்
ஆயிரம் வருடங்கள் கழித்தும்
அதன் கிளைகள்
தரையைநோக்கி
எப்படி வளைகின்றன பாரேன்.
****
திட்டவட்டமான விதிகள் இல்லை
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி
இதெல்லாம்,
நிலவோ பனியோ
தம் நிழல்களை எவ்விதம்
படியவைக்கின்றன என்பதைப்
பொறுத்தது
****
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
- ஜென் கவிதைகள்
தமிழில் – யுவன் சந்திரசேகர்