<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>நதியலை</title>
	<atom:link href="http://nathiyalai.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nathiyalai.wordpress.com</link>
	<description>தொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)</description>
	<lastBuildDate>Tue, 10 Nov 2009 07:51:24 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='nathiyalai.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/5d548fea3255d414dfeee9e8287cb4f7?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>நதியலை</title>
		<link>http://nathiyalai.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>அலையுடனான வாழ்க்கை – 2</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/11/10/wave-2/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/11/10/wave-2/#comments</comments>
		<pubDate>Tue, 10 Nov 2009 06:19:01 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[Octavio Paz]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=375</guid>
		<description><![CDATA[முதல் பகுதி 
காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்&#8230;..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=375&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://nathiyalai.wordpress.com/2009/11/05/wave-1/">முதல் பகுதி </a></p>
<p>காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்&#8230;..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். மென் தொடுகைகளாலும் கிசுகிசுப்புக்களாலும் முத்தங்களாலும் அவளுடைய இருப்பு வந்துபோய்க்கொண்டிருந்தன. அவளின் நீரில் நுழைந்து முழுமையாக நனைந்து கண் இமைக்கும் நொடியில் மேல் எழுந்து உச்சமடைந்து தலைகிறுகிறுத்து அதிசயமாக தொங்கி கல்லை போல் கீழ் விழுந்து ஒரு இறகு உலர்ந்து மெல்லென இளைபாருவதைப்போல் உணர்ந்தேன். ஆயிரம் சந்தோஷ மென்னடிகளால் நொருங்கி விழிப்புற்று ஆயிரம் தாக்குதல்களால் புன்னகை பிடுங்கப்பட்டு நீரில் உறங்குவதற்கு ஈடில்லை வேறெதுவும்.</p>
<p>ஆனால் அவள் இருப்பின் மையத்தை என்னால் எட்டமுடியவில்லை. வலியின், இறப்பின் தெண்மையை என்றுமே தொட்டதில்லை. பெண்களை உறுதியற்றவர்களாகவும் புதிராகவுமாக்கும் அந்த ரகசிய தோற்றமும் எல்லாம் பிணைத்து துடித்து சமனாகி பின் மூர்ச்சிக்கும் அம்மின்சார புள்ளியும் அலைகளில் இல்லை. ஒரு பெண்ணை போன்றே இவளின் உணர்வுகள் நீர்த்திரைகளாக பரவுகிறது. ஆனால் அவை ஒரே மைய வட்டங்களாக அல்லாமல் கோணற்மானலாக, ஒவ்வொரு முறையும் பிற மண்டலங்களை தொடும்வரை நீள்கின்றது. இவளை காதலிப்பதென்பது நினைத்துப்பார்த்திராத மிகவொதுக்கானவற்றோடு தொடர்புற்று தூரத்து நட்சத்திரங்களுடன் துடிப்பதாகும். ஆனால் அவளின் மையம்&#8230;.இல்லை, அவளுக்கு மையம் இல்லை. சுழற்காற்றில் இருப்பதுபோல் வெறுமனே வெட்ட வெளி மட்டுமே கொண்டவள் என்னை உள்ளிழுத்து திக்குமுக்காடவைக்கிறாள்.</p>
<p>அருகருகே படுத்து பரிமாறிக்கொண்டோம் நம்பிக்கைகளை, கிசுகிசுப்புக்களை, புன்னகைகளை. அனனத்துக்கொண்டோம். என் நெஞ்சில் பரந்து விரிந்தாள். என் காதுகளில் சிறிய நத்தைப்போல் பாடினாள். மிகவும் பணிவாகவும் வெளிப்படையாகவும் மாறினாள். சிறிய விலங்கைப்போல என் பாதங்களை பற்றிக்கொண்டாள் அமைதியான தண்ணீராக. அவளின் எல்லா எண்ணங்களையும் நான் வாசிக்கும்படியாக மிகவும் தெளிந்திருந்தாள். சில இரவுகளில் அவளின் தோள் பாஸ்பரஸால் போர்த்தப்பட்டிருப்பதை போலானாள், அவளை அனைப்பது இரவின் ஒரு துண்டில் பச்சைக்குத்திய நெருப்பை அனைப்பது போலிருந்தது. ஆனால் அவள் சமயங்களில் கருப்பாவும் கசப்பாகவும் கூட ஆனாள். எதிர்பாரா நேரத்தில் கத்தினால், துக்கித்தாள், சுருண்டுக்கொண்டாள். அவளின் உறுமல் சப்தங்கள் அண்டைவீட்டாரையெல்லாம் எழுப்பியது. இவளின் சப்தங்களை கேட்டு கடற்காற்று என் வீட்டின் கதவை பிராண்டியது. அல்லது மேல்கூரையில் உரக்க கத்தியது. மேகமூட்டமான நாட்கள் அவளை எரிச்சலூட்டியது. மேசை நாற்காலிகளை உடைத்தாள், மோசமான வார்த்தைகளை கூறினாள். என்னை பச்சை சாம்பல் நிற நுரைகளாலும் அவமானங்களாலும் மூடினாள். காறி உமிழ்ந்தாள், அழுதாள், தூற்றினாள், மிரட்டினாள். நிலவும், நட்சத்திரங்களும், உலகத்தின் பிற ஒளிகளுக்கேற்பவும் அவளின் தோற்றமும் குணமும் மாறிக்கொண்டே இருந்தன. நான் அற்புதமானவைகள் என்று நினைத்ததெல்லாம் மாறி ஒரு அபாயகரமான அலையை போலானாள்.</p>
<p>அவள் தனிமையை தவிர்த்தாள். வீடு முழுவதும் நத்தைகளும், சிப்பிகளும், அவளின் அதீத கோபத்தால் உடைக்கப்பட்ட சிறிய விசைப்படகும் இருந்தன. (இப்பிம்பங்களின் சுமைகள் ஒவ்வொரு இரவிலும் என்னை விட்டகன்று அவளின் கொடுமையான அல்லது மென்மையான சுழற்காற்றால் எல்லாவற்றுடன் சேர்ந்து நானும் மூழ்கினேன்.) எத்தனை சின்னஞ்சிறிய பொக்கிஷங்கள் அந்நேரத்தில் தொலைந்து போயின. ஆனால் என்னுடைய படகும், நத்தைகளின் மௌனமான பாடலும் போதுமானதாக இல்லை. மீன் கூட்டத்தை என் வீட்டிற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. அவளின் மார்புகளை தடவிக்கொடுப்பதும், கால்களுக்கிடையில் உறங்குவதும், வண்ண நிறங்களை கொண்டு அவளின் முடிகளை பாராட்டுவதுமாக மீன்கள் அவளுடன் நீந்துவதை பொறாமையற்ற முறையில் நான் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.</p>
<p>அம்மீன்களில் குறிப்பாக சில அருவருக்கத்தக்கதும் முரட்டுத்தனமிக்கதும் இருந்தன. மிகப்பெரிய நிலையான விழிகளுடனும் கூர்மையான இரத்தம்தாகித்த வாய்களுடனும் சிறியநீர்நிலைகளிலிருந்து (aquarium) வந்த சிறுபுலிகள் அவை. என் தோழி எதன் அடிப்படையில் அவர்களுடன் விளையாடுவதில் மகிழ்கிறாளென்றும், யாரை நான் நிராகரிக்க நினைக்கிறேனோ அவர்களுக்கு வெட்கமற்று ஏன் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. மணிக்கணக்காக அக்கொடும் ஜீவன்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள் என்னால் தாளமுடியாமல் கதவை திறந்து அவற்றை பிடிக்கப் போனேன். வேகமாக என் கைகளை விட்டு வழுக்கிக்கொண்டு நழுவியபோது அவள் சிரித்து என்மேல் வேகமாக அலை அடித்து வீழ்த்தினாள். மூழ்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நீலநிறமாகி நான் மரணத்தை தொடும் நேரத்தில் என்னை கரையில் ஒதுக்கி முத்தமிடத்துவங்கினாள் எதுவும் தெரியவில்லை எனச்சொல்லி. நான் மிகவும் சோர்வானேன், களைப்புற்றேன், பைத்தியமாக்கப்பட்டேன். அதே சமயத்தில் அவள் என்னை கிளர்ச்சியூட்ட துவங்கியது என் கண்களை மூடச்செய்தது, அவளின் குரல் மிகவும் இனிமையாயிருந்தது, மூழ்கி சந்தோசமாக மரணிப்பதை பற்றி அவள் பேசினாள். நான் மீண்ட பிறகு பயம்கொள்ள துவங்கினேன், அவளை வெறுத்தேன்.</p>
<p>இத்தொடர்பை தவிர்த்தேன். என் நண்பர்களை சந்திக்க துவங்கினேன். என் பழைய நெருங்கிய உறவுகளை புதுபித்துக்கொண்டேன். என் பழைய தோழியை சந்தித்தேன். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதான வாங்குறுதியை அவளிடம் வாங்கிக்கொண்டு அலையுடனான எனது வாழ்க்கையை பற்றிச் சொன்னேன். ஒரு ஆணை காப்பாற்றுவதற்கான சாத்தியங்களை போன்று வேறெதுவும் ஒரு பெண்ணை நெகிழ்விப்பதில்லை. அவளின் எல்லா திறன்களையும் பயன்படுத்தினாள். ஆனால் ஒரு பெண்மணியால் அதுவும் ஒரு எல்லைக்குள்ளான உடலும் உயிரும் கொண்ட பெண்மணியால் என்ன செய்ய முடியும் நாளும் மாறிக்கொண்டிருக்கும் என் தோழியின் எதிரில் &#8211; அதுவும் எப்போதும் என்றும் தொடரும் உருமாற்றங்களில் அவளுக்கு நிகர் அவளாகவே இருக்கிறாள்.</p>
<p>பனிக்காலம் துவங்கியது. வான் சாம்பல்நிறம் பூண்டது. நகரங்களில் பனி பொழிந்து ஆலங்கட்டிமழை பெய்தது. என் தோழி இரவுகளில் அழுதாள். ஒரு வயதான மூதாட்டி மூலையில் ஒடுங்கிக்கிடப்பதை போல பகல் நேரங்களில் மௌனமாக மூலையில் முடங்கி தன்னை தனிமை படுத்திக்கொண்டு முணங்கினாள். மிகவும் சில்லென்றானாள், அவளுடன் உறங்குவதென்பது நடுக்கமுற்று, சிறிது சிறிதாக இரவுமுழுவதும் ரத்தம், எலும்பு, எண்ணம் எல்லாம் குளிரால் விரைப்புற செய்தது. கடந்து செல்ல முடியாமல் அமைதியற்று மிகவும் ஆழமானாள். அடிக்கடி அவளை விட்டு அகன்றேன். ஒவ்வொரு முறையும் பிரிவை நீடித்தேன். அவள் ஒரு மூலையில் படுத்து கத்தினாள், இரும்பான பற்களாலும் கொடும் நாவாலும் சுவற்றை பிராண்டி பொடியாக்கினாள். இரவுகளை துக்கங்களோடு என்மேல் பழிசுமத்தி கழித்தாள். பயங்கர கனவுகள் கண்டு சூரியனை பற்றியும் வெதுவெதுப்பான கடல்களை பற்றியும் பிணாத்தினால். மாதங்களாய் நீண்ட இரவுகளில் துருவங்கள் ஒரு மாபெரும் ஐஸ் கட்டியாக மாறி, கருநிற வானத்தின் கீழ் மிதப்பதாக கனவுகண்டாள். என்னை அவமானப்படுத்தினாள். எள்ளி நகைத்தாள். வீட்டை பரிகாசங்களிலும் மிரட்சியிலும் நிரப்பினாள். பாதாள குருட்டு பூதங்களை கூவி அழைத்தாள். மின்சாரம் பாயத்துவங்கியது, தொட்டதையெல்லாம் பொசுக்கினால். அமிலத்தால் நிரம்பினாள். தொட்டு செல்லும் அனைத்தையும் கரைத்தால். அவளின் இனிமையான அனைப்புகள் என்னை நெருக்கும் முடிச்சுகளாக மாறின. அவளின் உடல் பச்சையாக ஒடுங்கிவிரியுஞ்சக்தியோடு கருணையற்ற அடிகளாக கடுமையாக தாக்கியது. நான் தப்பி ஓடினேன். அக்கொடிய மீன் தனது குரூரமான புன்னகையால் என்னை பரிகசித்து சிரித்தது.</p>
<p>செங்குத்தான பாறைகளையும் பைன் மரங்களையும் கொண்ட மலையில் மெல்லிய குளிர்காற்றை சுவாசித்தேன் சுதந்திர எண்ணத்தைப்போல். மாதக் கடைசியில் வீடுதிரும்பினேன். தீர்மானித்திருந்தேன். பளிங்குகளாலான வெப்பமூட்டிக்கு அருகில் மிகவும் குளுமையாக இருந்தது. அனைந்திருந்த நெருப்பிற்கு அருகில் ஒரு ஐஸ் சிலையைக்கண்டேன். அவளின் சோர்வூட்டும் அழகில் நகரமுடியாமலானேன். பெரிய கோணிப்பையில் அவளை இட்டு என் தோளில் சுமந்தபடி தெருவிற்கு எடுத்து வந்தேன். புறநகர்பகுதியில் இருந்த ஒரு உணவு விடுதியில் பணிபுரியும் நண்பனுக்கு அவளை விற்றேன். அவன் உடனே அவளை சிறு துண்டுகளாக நறுக்கி குப்பிகளை குளுமையாக்க வைத்திருந்த வாளியில் பத்திரமாக நிரப்பினான்.</p>
<p><strong>நன்றி :  உயிர்மை – நவம்பர் 2009</strong></p>
<p><em>ஆங்கிலத்தில் வாசிக்க : <a href="http://members.lycos.co.uk/shortstories/pazwave.html">My Life with the Wave by Octavio Paz</a></em></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/375/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/375/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/375/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/375/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/375/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/375/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/375/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/375/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/375/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/375/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=375&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/11/10/wave-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அலையுடனான வாழ்க்கை &#8211; 1</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/11/05/wave-1/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/11/05/wave-1/#comments</comments>
		<pubDate>Thu, 05 Nov 2009 06:37:41 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[Octavio Paz]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=370</guid>
		<description><![CDATA[நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=370&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர வாழ்க்கை கடலை வீட்டு அகலாத அலையின் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுபட்டது என்பதை விளக்கினேன். என்னை கூர்ந்து கவனித்தாள். நான் இனிமையாய், உறுதியாய் பரிகாசமாய் முயற்சித்தேன். அவள் அழுதாள், கத்தினாள், அனைத்தாள், பயமுறுத்தினாள். நான் மன்னிப்புகோற வேண்டியதாயிற்று.</p>
<p>அடுத்த நாள்முதல் தொல்லைகள் ஆரம்பமாகின. நடத்துனர், பயணிகள், காவலர்கள் பார்த்துவிடாமல் ரயிலுக்குள் எப்படி ஏறுவது. ஒரு அலையை தண்டவாளத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வித விதிமுறைகளும் நிச்சயமாக கூறப்படவில்லையெனினும் சொல்லப்படாததே இச்செயல் எத்தனை தீவிரமாகக் கருத்தப்படுமென்பதற்கான ஒரு அறிகுறி. தீவிர யோசனைக்கு பிறகு வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில்நிலையம் அடைந்தேன். இருக்கையை பிடித்தேன். யாரும் பார்க்காத தருணத்தில், பயணிகளுக்கான தண்ணீர் குவலையை காலி செய்து என் தோழியை பத்திரமாக அதில் ஊற்றினேன்.</p>
<p>அடுத்திருந்த தம்பதியரின் குழந்தை அவர்களின் அபார தாகத்தை கூறிய போது முதல் சம்பவம் ஆரம்பமானது. அவர்களை தடுத்து சிற்றூண்டிகளும் எலுமிச்சை சாறும் வாங்கித்தருவதாக உறுதியளித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவரும் நேரத்தில் மற்றுமொரு பயணி தாகத்துடன் வந்தாள். அவளுக்கும் வாங்கித்தருவதாக சொல்லலாம் என்று நினைத்து பின் அவளுடன் வந்த நபரின் முறைப்பை பார்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்பெண்மணி ஒரு காகித கோப்பையை எடுத்துக்கொண்டு நீர்குவலையின் அருகில் சென்று குழாயை திறந்தாள். கோப்பை பாதி நிறைவதற்குள் என் தோழிக்கும் அவளுக்குமிடையில் தாவிச்சென்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்ததாள். அவளிடம் மன்னிப்பு கேட்கும் நேரத்தில் குழந்தைகளில் ஒன்று மறுபடியும் குழாயை திறந்து விட்டது. பெருங்கோபத்தோடு குழாயை மூடினேன். அப்பெண்மணி கோப்பையை தன் உதடுகளுக்கு கொண்டுசென்றாள்.</p>
<p>&#8220;ஆ&#8230;..இத்தண்ணீர் உப்புக்கரிக்கிறது&#8221;</p>
<p>அச்சிறுவனும் இதையே எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தனர். அப்பெண்ணின் கணவர் நடத்துனரை அழைத்தார் :</p>
<p>&#8220;இந்த ஆள் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டார்&#8221;</p>
<p>நடத்துனர் கண்காணிப்பாளரை அழைத்தார்</p>
<p>&#8220;நீ தண்ணீரில் ஏதோ பொருளை கலந்துவிட்டாயா?&#8217;</p>
<p>கண்காணிப்பாளர் காவலரை அழைத்தார்</p>
<p>நீதான் தண்ணீரை விஷமாக்கினாயா?</p>
<p>காவலர் தலைவரை அழைத்தார்</p>
<p>நீ தானே விஷம் வைத்தவன்?</p>
<p>தலைவர் மூன்று காரியஸ்தர்களை அழைத்தார். பயணிகளின் பார்வைகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் என்னை ஒரு காலியான பெட்டிக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த நிறுத்தத்தில் என்னை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு நீண்ட விசாரனைகளை தவிர்த்து வேறெதுவும் யாரும் என்னிடம் பேசவில்லை. &#8216;இந்த வழக்கு மிகவும் கடுமையானது. உண்மையில் நீ குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க எண்ணவில்லையா? என்று தலையாட்டிக்கொண்டே சொன்ன சிறை அதிகாரி உட்பட என்கதையை நான் விளக்கினாலும் யாரும் நம்புவதாக இல்லை.</p>
<p>ஒரு நாள் என்னை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.</p>
<p>உன் வழக்கு மிகவும் கடுமையான ஒன்று என்று அவரும் சொன்னார். இவ்வழக்கை நான் குற்றவியல் நீதிபதிக்கு ஒப்புவிக்கிறேன் என்றார்.</p>
<p>ஒரு வருடம் கடந்தது. கடைசியாக என்னைப்பற்றின தீர்மானத்திற்கு வந்தனர். யாரும் என் செயலால் பாதிக்கப்படவில்லை என்பதால் எனக்கான தண்டனை மிதமானதாக இருந்தது. குறுகிய காலத்திற்கு பின் நான் விடுதலையாகும் நாளும் வந்தது.</p>
<p>சிறையின் உயர் அதிகாரி என்னை அழைத்தார். &#8216;இப்போது நீ விடுதலையாகிறாய், நீ பாக்கியசாலி. அதிர்ஷ்டவசமாக யாரும் உன் செயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்செயலை நீ மீண்டும் செய்ய முற்படாதே. அடுத்தமுறை இவ்விஷயம் இத்தனை எளிதில் முடிவடைந்துவிடாது என்றார். எல்லோரும் பார்த்த அதே சந்தேகப்பார்வையால் தான் அவரும் என்னை பார்த்தார்.</p>
<p>அன்று மதியமே நான் ரயிலை பிடித்தேன். ஒருமணி நேர அசௌகரியப்பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு வண்டி பிடித்து வீட்டை அடைந்தேன். என் வீட்டு வாசலில் சிரிப்பொலியும் பாட்டு சத்தமும் கேட்டது. ஆச்சர்ய அலை இதயத்தை கடந்து செல்லும்போது ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வைப்போல எனது இதயத்தில் ஓர் வலியை உணர்ந்தேன். அங்கு என் தோழி எப்போதும் போல் சிரித்துப்பாடிக்கொண்டிருந்தாள்.</p>
<p>நீ எப்படி திரும்பி வந்தாய்?</p>
<p>வெகு சாதாரணம். ரயில் வண்டியில் என்னை வெறும் உப்பு தண்ணீர் தான் என்று யாரோ உறுதி செய்த பின்னர் ரயில் இஞ்சினில் ஊற்றினர். மிகவும் கடினமான பயணமாக இருந்தது அது. வெகு விரைவில் நான் வெள்ளை ஆவியாகி மாறி பின் நல்மழையாகி விழுந்தேன். மிகவும் இளைத்தேன். என்னிலிருந்து பல துளிகளை இழந்தேன்.</p>
<p>அவளின் இருப்பு என் வாழ்கையை மாற்றியது. வீட்டின் இருண்ட தாழ்வாரங்களும், அழுக்கு இருக்கைகளும் சூரியனாலும் காற்றாலும் சப்தங்களாலும் பச்சை மற்றும் நீள நிற பிரதிபலிப்புக்களாலும் ஏராளமான சந்தோச செழிப்பு மிக்க முழக்கங்களாலும் எதிரொலிகளாலும் நிறைந்தன. ஒரு அலை என்பது எத்தனை அலைகள்? அவள் எப்படி ஒரு கடலை, பாறையை, அணைச்சுவரை, இதயத்தை, நெற்றியை தன் நுரைகளால் மகுடம் சூட்டுகிறாள்.</p>
<p>நிராகரிக்கப்பட்ட மூலைமுடுக்குகளும், தூசு தும்புகள் நிறைந்த இடங்களெல்லாமும் அவளின் மென்மையான கரங்களால் தீண்டப்பட்டன. எல்லாம் புன்னகைக்க துவங்கின. எல்லாம் பற்கள் மின்ன சிரித்தன. சூரியன் மகிழ்ச்சியோடு என் பழைய அறையில் நுழைந்து பிற வீடுகளை, நகரை, மாநிலத்தை, நாட்டை நிராகரித்து பல மணி நேரங்கள் என் வீட்டில் தங்கினான். இப்படி பதுங்கி நடப்பதை நேரம் கடந்த சில இரவுகளில் அதிர்ச்சியுடன் நட்சத்திரங்கள் பார்த்திருந்தன.</p>
<p>&#8230;&#8230;.தொடரும்</p>
<p><strong>நன்றி :  உயிர்மை &#8211; நவம்பர் 2009</strong></p>
<p><em>ஆங்கிலத்தில் வாசிக்க : <a href="http://members.lycos.co.uk/shortstories/pazwave.html">My Life with the Wave by Octavio Paz</a></em></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/370/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/370/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/370/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=370&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/11/05/wave-1/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>The Map of Love – Adhaf Soueif</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/10/28/the-map-of-love/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/10/28/the-map-of-love/#comments</comments>
		<pubDate>Wed, 28 Oct 2009 05:51:58 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[Adhaf Soueif]]></category>
		<category><![CDATA[Booker Novels]]></category>
		<category><![CDATA[வாசித்த நூல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=360</guid>
		<description><![CDATA[எகிப்த் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடியில் இருந்த 1900 காலகட்டங்களையும், 1997 – 1998 காலகட்டங்களையும் பின்னனியாகக்கொண்டும் இரண்டு காலத்திலும் பயணிக்கின்றது இக்கதை. இப்புத்தகத்தின் பெயரை கொண்டு இது ஒரு காதல் கதையாக இருக்மென நினைத்து வாசித்தேன். ஆனால் காதலை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல் இரு வேறு கால கட்டங்களிலுமான வரலாற்று நிகழ்வுகளை, அரசியலை, சுதந்திர போராட்டங்களை, எகிப்த் நிலத்தின் நாகரீகத்தினை, நூறாண்டுகளில் அது அடைந்த மாற்றங்களையும் பதிவுசெய்துள்ளது.
“என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்துவிட்டேன். ஆனால் அவளால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=360&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="aligncenter size-full wp-image-361" title="map" src="http://nathiyalai.files.wordpress.com/2009/10/map.jpg?w=307&#038;h=475" alt="map" width="307" height="475" />எகிப்த் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடியில் இருந்த 1900 காலகட்டங்களையும், 1997 – 1998 காலகட்டங்களையும் பின்னனியாகக்கொண்டும் இரண்டு காலத்திலும் பயணிக்கின்றது இக்கதை. இப்புத்தகத்தின் பெயரை கொண்டு இது ஒரு காதல் கதையாக இருக்மென நினைத்து வாசித்தேன். ஆனால் காதலை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல் இரு வேறு கால கட்டங்களிலுமான வரலாற்று நிகழ்வுகளை, அரசியலை, சுதந்திர போராட்டங்களை, எகிப்த் நிலத்தின் நாகரீகத்தினை, நூறாண்டுகளில் அது அடைந்த மாற்றங்களையும் பதிவுசெய்துள்ளது.</p>
<p><strong><em>“என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்துவிட்டேன். ஆனால் அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, புரிந்துக்கொள்ளவும் மாட்டாள். நம்பிக்கை இழக்காமல் எப்போதும் அவருக்காக காத்திருக்கின்றாள்”</em></strong> என்ற வரிகளில் மிகவும் சாதாரணமாகவே கதை தொடங்கியதெனினும் அதே வரிகளில் கதை நிறைவடையும் போது அவ்வரிகளின் தாக்கம் நம்மை முழுமையாக ஆக்கரமிக்கின்றது. எந்த ஒரு உணர்வையும் தனித்து பார்க்கும் போது அதன் வீரியத்தை முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள ஏதுவாய் இருப்பதில்லை. அதுவே சூழலோடும் தன்மையோடும் அறியப்படும்போது நம்மையும் அதனோடு ஒன்றி விடச்செய்கின்றது.</p>
<p>தாயின் உடல் நலம் சீறற்றுப்போனதால் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுவிட, அந்நேரத்தில் ஒரு பழைய டரங்கு பெட்டியை தன் தாயின் வீட்டில் காண்டடைகிறாள் லண்டனில் வசிக்கும் இசபெல். அதில் பல காகிதங்களும், உரைகளும், கடிதங்கலும், செய்திதாள்களிலிருந்து வெட்டப்பட்ட பக்கங்களும் மேலும் சில பொருட்களையும் காண்கிறாள். அதிலுள்ள குறிப்புகள் எல்லாம் அரபி மொழியிலும், பெரன்ச்சிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றன. தன் குடும்பத்தை பற்றிய வரலாறு அதிலிருக்கக்கூடும் என்றும் அதை அறிந்துக்கொள்ளும் ஆவலில் தன் நண்பரான உமரை அணுகுகிறாள். அவர் தன் தங்கையான எகிப்தில் வசிக்கும் அமல் இதற்கு உதவி புரிவாரென அவளிடம் அனுப்பி வைக்கிறார். அமலின் வாயிலாக நூறாண்டிற்கு முன் அவர்கள் குடும்பத்தின் நிகழ்வுகளை கதையாக நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர்.</p>
<p>அக்குடும்ப தலைமுறைகளின் வரைபடம் முதல் பக்கத்திலேயே கொடுத்திருப்பதால் யார் யாருக்கு எப்படி சொந்தம் என்று கதையின் ஆரம்பத்தில் ஒவ்வொரு பெயராக அறிமுகமாகும்போது அதனை குழப்பிக்கொள்ளாமல் சரியாக புரிந்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது. 1900 ஆண்டில் தன் கணவனை இழந்த சோகத்தில் ஒரு மாறுதலுக்காக சிறிது காலம் எகிப்தில் தங்கி வர இங்கிலாந்திலிருந்து Anna வருகிறாள். தன் கணவரின் தந்தையின் மூலம் அங்கு ஆட்சிப்புரியும் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் பலருடனும் நட்புக்கொண்டு அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் சென்று தன் பொழுதை கழிக்கிறாள். தொடர்ந்து தன் மாமனாருக்கு எழுதும் கடிதங்கள் மூலம் அந்நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. முதல் நூறு பக்கங்கள் அவள் செல்லும் இடங்களை பற்றிய விவரனைகளாகவும் சந்தித்த மனிதர்களை பற்றியதாகவும் இருப்பதால் மிகவும் நிதானமாகவே கதை நகர்கின்றது.</p>
<p>சினாய் பிரதேசத்திற்கு Anna ஆண்வேடம் அணிந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எகிப்தியர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைக்கப்படுகின்றாள். பிறகு அவ்வீட்டில் உள்ள பெண்மணி லைலாவுடன் நட்பாகி, அவளின் அண்ணனும் Annaவும் காதலித்து ஆங்கிலேய அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர். தன்னுடைய மொழியை, நிலத்தை, சொந்தங்களை, நண்பர்களையெல்லாம் துரந்து கணவன்மேலுள்ள காதலால், அவ்வீட்டிலுள்ள மனிதர்கள் தன் மீது காட்டும் அன்பால் அவர்களையே தன் உலகமாக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். <em><strong>“அவனின் கடலாக இருந்தாள் நீந்துவதற்கு, அவனின் பாலைவனமாக இருந்தாள் துள்ளிகுதிப்பதற்கு, அவனின் நிலமாக இருந்தாள் உழுவதற்கு”</strong></em> என்று அவர்களின் காதல் விவரிக்கப்படுகின்றது.</p>
<p>அவள் அந்நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை அக்காலகட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட சம்பவங்களோடும், ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் எகிப்த் நிலமக்கள் சந்திக்க நேர்ந்த சங்கடங்களையும் பிணைத்து கச்சிதமாக பதிவாக்கியுள்ளார் ஆசிரியர். முழுமையான வரலாற்றுக்காவியமாக அல்லாமல் ஆங்காங்கே கதையோடு இணைந்த தகவல் குறிப்புகளாக Ottoman Empire, Khedive Tewfiq, Lord Cromer மேலும் Denshawai incident பற்றிய தகவல்களை கொடுத்திருப்பது எகிப்த் நாட்டு வரலாற்றை தெரிந்துக்கொள்ள நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது.</p>
<p>தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் முன்னேற்றத்திற்காகவும் அல்லாமல் அவர்களின் ஆற்றலை எல்லாம் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளை முறியடிக்கவே பயன்பட்டு வீணாக்கிக்கொண்டிருப்பதின் வருத்தத்தை கதை நெடுகிலும் காணமுடிகின்றது. சுதந்திரப்போராட்ட சம்பவங்களை பதிவித்தது மட்டுமல்லாமல் 1997 – 1998 காலகட்டங்களில் எகிப்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களை பற்றியும் பதிவுசெய்துள்ளார். காதல் கதையினூடாக பதிவிக்கப்படும் இச்சம்பவங்கள் மிதமான தாக்கத்தையே தருகின்றதெனினும் காலத்திற்கேற்ப அக்குறிப்புகளை புகுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. <em><strong>“ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில் மோசமான காலத்தில் கொடூரமான மாட்டிக்கொண்டதாக கவலை பட்டுக்கொண்டிருக்காமல் வரலாறு அதன்போத்தில் தன்னை எழுதிச்செல்ல காத்திருத்தலே நன்று”</strong></em> என்று அன்றைய காலக்கட்டங்களில் எழுதிய வரிகள் இன்றும் பொருந்திப்போவதாக காட்டியிருக்கின்றார்.</p>
<p>தன் கணவனை இழந்த சோகத்தில் எகிப்திற்கு வந்த Anna பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் கணவனை இழந்து, நெருங்கிய நட்பான கணவனின் தங்கையையும் அவளின் குடும்பத்தையும் பிரிந்து மகளுடன் இங்கிலாந்து திரும்புவதாக முடிவடைகின்ற கதையை இரண்டு தலைமுறைக்கு பிறகு ஏற்படும் காதலோடும் நட்போடும் பிணைத்து தொய்வில்லாமல் வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார்.</p>
<p>இறுதி சில பக்கங்களை வந்தடைந்துவிட்ட தருணங்களில் விரைவில் இக்கதை முடிவடைந்துவிடுமே என்ற எண்ணத்தில் சற்று நிதானமாகவே நான் வாசித்துக்கொண்டிருக்க, தன் குடும்பத்தின் மூத்த தலைமுறையினறை பற்றி வாசிக்கும் கதைசொல்லியான அமல் அவர்கள் கதையை அறிந்திருந்தும் Anna வின் இறுதி பகுதிகளை வாசிக்க தாமதப்படுத்துகிறாள் என்ற வரிகளை வாசிக்கும் போது மெலிதான புன்னகையை தவிர்க்கமுடியவில்லை. நல்ல புத்தகங்களையும் நம்மை அதனுள் மூழ்கடித்துவிடும் எழுத்துக்களையும் பிரிய கடினமாகவே இருக்கின்றது. புத்தகம் முடியும் வரை அக்காகித மாந்தர்கள் நம்முடனேயே தங்கிவிடுகின்றனர். அதிலும் Annaவின் கணவர் கதாப்பாத்திரம் வெகு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இப்புத்தகம் 1999 புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது. அந்த ஆண்டு J.M.Coetzeeயின் <a href="http://nathiyalai.wordpress.com/2007/04/19/disgrace/">Disgrace</a> நாவல் புக்கர் பரிசை வென்றது என்றாலும் இப்புத்தகமும் முற்றிலும் வித்தியாசமான நிறைவான அனுபவத்தை தந்தது. ஆரம்பம், ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பம், முடிவு என்று நான்கு பகுதிகளாக பிரித்து அதிலுள்ள உட்பிரிவு ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் கதைக்கு ஏற்ப பொன்மொழிகளையோ பாடல் வரிகளையோ மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.</p>
<p>இக்கதையின் ஆசிரியரான Adhaf Soueif இந்நாவலின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவர் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டது மட்டுமல்லாமல் அரபு-ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகின்றார். இவரை பற்றி <a href="http://ahdafsoueif.com/">இங்கு</a> வாசிக்கலாம்.</p>
<p>Book : The Map of Love<br />
Author : Ahdaf Soueif<br />
Pages : 516<br />
First Edition : 1998</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/360/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/360/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/360/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/360/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/360/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/360/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/360/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/360/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/360/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/360/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=360&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/10/28/the-map-of-love/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/10/map.jpg" medium="image">
			<media:title type="html">map</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Magonia</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/10/14/magonia/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/10/14/magonia/#comments</comments>
		<pubDate>Wed, 14 Oct 2009 06:33:12 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[திரைப்படம்]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=357</guid>
		<description><![CDATA[
பல்வேறான முடிச்சுக்களால் பிணைக்கப்படும் உறவுகளின் உணர்வுகளை அழுத்தமாய்ச்சொல்லும் வெவ்வேறு மூன்று கதைகளை உள்ளடக்கமாய்க் கொண்ட இந்த டச்சுத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்பை, நெகிழ்வைப் பேசும் படைப்புகள் அனைவருக்குமே மிக நெருக்கமானவையாகத்தான் இருக்கமுடியும். மூன்று கதைகளுமே ஒரு தந்தை தன் சிறு மகனை சந்திக்கும்போது கூறுவதாக அமைந்திருக்கிறது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத கதைகள் எனினும் அவை மூன்றுமே மனம் நெகிழச்செய்யும் உணர்வுகளைக்கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.
1.
தினமும் பள்ளிவாசலில் ஓதுவதற்கு ஒரு முதியவரை முதுகில் சுமந்துச் செல்கிறான் அவ்வீட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=357&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="aligncenter size-full wp-image-358" title="Magonia" src="http://nathiyalai.files.wordpress.com/2009/10/magonia.jpg?w=200&#038;h=300" alt="Magonia" width="200" height="300" /></p>
<p>பல்வேறான முடிச்சுக்களால் பிணைக்கப்படும் உறவுகளின் உணர்வுகளை அழுத்தமாய்ச்சொல்லும் வெவ்வேறு மூன்று கதைகளை உள்ளடக்கமாய்க் கொண்ட இந்த டச்சுத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்பை, நெகிழ்வைப் பேசும் படைப்புகள் அனைவருக்குமே மிக நெருக்கமானவையாகத்தான் இருக்கமுடியும். மூன்று கதைகளுமே ஒரு தந்தை தன் சிறு மகனை சந்திக்கும்போது கூறுவதாக அமைந்திருக்கிறது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத கதைகள் எனினும் அவை மூன்றுமே மனம் நெகிழச்செய்யும் உணர்வுகளைக்கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>1.</p>
<p>தினமும் பள்ளிவாசலில் ஓதுவதற்கு ஒரு முதியவரை முதுகில் சுமந்துச் செல்கிறான் அவ்வீட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் ஒர் இளைஞன். ஓதும் வரை அவரை தாங்கிப்பிடித்து நிறுத்தி பின் மீண்டும் அவரை வீட்டிற்கு சுமந்து செல்கிறான். வயதாகிவிட்டதால் ஓதும்போது குரல் கரகரத்து இடையில் இருமலுடம் மிகுந்த சிரமங்களுடனேயே அவர் இப்பணியை விடாது மேற்கொண்டு வருகிறார். மக்கள் அவர் ஓத்தத்துவங்கிய உடனேயே காதுகளை அடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதைவுகளை அடைக்கின்றனர்.</p>
<p>பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டுவரும் இறைபணியை, தனதான கடமையாக்கிக்கொண்ட வேலைகளை செய்ய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது ஏற்படும் வேதனையை அம்முதியவர் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறார். இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய வேண்டாம் எனச்சொல்லவோ அவரை தடுத்து நிறுத்தவோ இயலாமல் தவிக்கும் அப்பெண்ணின் சங்கடங்களும், முதியவரிடம் பேசி அவருக்கு விளங்கவைக்கவும், நமக்கு பிடித்தமானவற்றை சமயங்களில் விட்டுவிலகவேண்டிய கட்டாயத்தையும் உணர்த்த முயற்சிக்கும் இளைஞனின் தெளிவும், இருவரும் முதியவர் மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அருமையான வசனங்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.</p>
<p>ஒருகட்டத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்ணே அவர் ஓதும் சப்தம் தாளாமல் காதை பொத்திக்கொண்டதை கண்டு ஓதுவதை முதியவர் நிறுத்த இளைஞன் ஓதத்துவங்குகிறான். பின் நிகழும் சம்பவங்களெல்லாம் உடையப்போகும் மனங்களில் அடுக்கடுக்காக ஏற்றிவைக்கப்படும் பாரமாக அதிகரித்துக்கொண்டுவந்து காதலர்களின் பிரிவில் முடிவடைகின்றது.</p>
<p>2.</p>
<p>மலைபிரதேசத்தில் இயற்கை எழிலை காண சுற்றுலா மேற்கொள்ளும் மத்தியவயதை கடந்த தம்பதியர்களின் வாகனம் பழுதுபடவே அவர்கள் பயணம் தடைபடுகின்றது. கணவன் வாகனத்தை பழுதுபார்த்துக்கொண்டிருக்க, தற்செயலாக வந்தடைந்துவிட்ட இடத்தை சுற்றிப்பார்த்து அதன் அழகை ரசிக்கிறாள் மனைவி. சற்று தள்ளி உயரமான இடத்தில் ஒரு வீடு தென்படவே அங்கு செல்கின்றனர்.</p>
<p>ரம்மியமான சூழல், எளிமையான வீடு, ஆடம்பரமற்ற நகர்வு, அங்கு வசிக்கும் இளைஞன் மற்றும் வயதானவரின் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கண்டு லயித்துப்போகிறாள். இவர்கள் தான் உண்மையான வாழ்கையை வாழ்கிறார்களோ என்று எண்ணுகிறாள். அவ்விடத்தில் அடுப்பை பற்றவைக்கக்கூட புராதன முறையில் நெருப்பை உண்டாக்குவதை கண்டு வியக்கிறாள்.</p>
<p>வேறு எதையோ தேடிப்போக எதிர்ப்பாராத ஆசுவாசம் கிடைக்கப்பட்டவளாய் நிம்மதி அடைகிறாள். உறக்கம் வராத நிசப்தமான இரவில் அங்கிருக்கும் இளைஞன் பாடத்துவங்க அவன் நெஞ்சில் புதைந்து அவள் அழும் காட்சி ஓர் அற்புத கவிதையெனலாம். பாடலின் மொழி புரியாவிட்டாலும் நம்மையும் நெகிழ்த்துக்கின்றது அப்பாடல். இக்கதையும் உறவுகள் என்றுமே சந்திக்கவிரும்பாத எதிர்ப்பாரா பிரிவைக்கொண்டே முடிக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p>3.</p>
<p>ஆறாண்டுகளுக்கு முன் வந்துச்சென்ற ஒரு மாலுமிக்காக காத்திருக்கும் காதலியின் இக்கதை ‘இயற்கை’ தமிழ்ப்படத்தின் கதையைக்கொண்டு முடிவு மட்டும் வேறுவிதமாக அமைந்திருக்கின்றது.</p>
<p>காதலன் திரும்பி வருவதற்கான எந்த நிச்சயமும் இல்லாமல் போனாலும் நிச்சயம் திரும்பி வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, அவனுக்கான காத்திருப்பு தரும் வேதனை, பிறரின் பரிகாசங்கள் தரும் வலி, தான் விரும்பி நேசிக்கும் ஒருத்தி இன்னொருவனுக்காக ஏங்கி காத்திருக்கும் சோகம், அவளை விட்டு விலக நேரும் அதிர்ஷ்ட்டமின்மை என பல சங்கடங்களை கொண்டு நகர்கின்றது இக்கதை.</p>
<p>ஒருவனுக்காக காத்திருத்தல் என்பதை அப்பெண் தனக்கான பாதுகாப்பு கவசமாக அணிந்துக்கொள்கின்றாளோவெனத் தோன்றியது. ஆறாண்டுகள் இல்லாமல் போனவனை மறந்து இன்று பிரிந்துப்போனவனுக்காகக் காத்திருக்கத்துவங்குவதாக முடிக்கப்பட்ட இக்கதையும மென்மையான நெகிழ்வுகளைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றது.</p>
<p>**</p>
<p>தந்தை மகனுக்கு சொல்வதாக அமைந்த இம்மூன்று கதையில் வரும் தந்தை மகன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியில் சந்திப்பது பிரிவையே. அதுவும் இக்கதையின் இறுதி காட்சிகள் சற்றும் எதிர்ப்பார்க்காதவை. சட்டென படம் முடிவடைந்து விட்டதும் திரையை சிலகணங்கள் வெறித்து அமரச்செய்துவிட்டது. கதையாக சொல்லப்படாது நிகழ்வாக நகரும் தந்தை மகன் பற்றிய கதை மற்ற மூன்றைவிடவும் அதிரச்செய்தது.</p>
<p>அழுத்தமான அடர்த்தியான வசனங்கள், அருமையான காட்சிப்பதிவு, மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல், அன்பான உள்ளங்கள் என நிறைவைத்தரும் அனைத்தையும் கொண்டுள்ள இப்படம் ‘வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப்பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் பலப்படும்படி இருக்கும்’ என்ற நா. பார்த்தசாரதியின் வரிகளை நினைவூட்டியது.</p>
<p>படம் – Magonia<br />
இயக்குனர் – Ineke Smits<br />
மொழி – Dutch<br />
வெளியான வருடம் – 2001<br />
விருதுகள் – மூன்று</p>
<p>நன்றி : <a href="http://www.aganazhigai.com/2009/10/2009.html">அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் &#8211; அக்டோபர் 2009</a></p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/357/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/357/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/357/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/357/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/357/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/357/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/357/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/357/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/357/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/357/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=357&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/10/14/magonia/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/10/magonia.jpg" medium="image">
			<media:title type="html">Magonia</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பெண் எழுத்தாளர்களின் புதிய முயற்சி</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/09/23/women-writers/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/09/23/women-writers/#comments</comments>
		<pubDate>Wed, 23 Sep 2009 07:37:10 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[அறிமுகம்]]></category>
		<category><![CDATA[பெண் எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=349</guid>
		<description><![CDATA[உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக Belletrista வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. Words Without Borders மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.
பெண் எழுத்தாளர்களின் புத்தக விமர்சனங்கள், உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=349&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக <a href="http://belletrista.com/2009/issue1/index.html">Belletrista </a>வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. <a href="http://www.wordswithoutborders.org/?post=Belletrista">Words Without Borders </a>மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.</p>
<p>பெண் எழுத்தாளர்களின் <a href="http://belletrista.com/2009/issue1/reviews_1.html">புத்தக விமர்சனங்கள்</a>, <a href="http://belletrista.com/2009/issue1/nandn_3_asia.html">உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்</a>, <a href="http://belletrista.com/2009/issue1/features_3.html">சிறப்பு கட்டுரை &amp; கதை பக்கங்கள்</a>, <a href="http://belletrista.com/2009/issue1/discussions.html">மேலும் நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், இலக்கிய செய்திகளின் தொகுப்புகள் </a>என எல்லாம் ஓரிடத்தில் வாசிக்க கிடைப்பது பெரும்மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கின்றது.</p>
<p>முதல் இதழில் வெளியாகியுள்ள 16 புத்தக விமர்சனங்களில் இந்தியப்பெண்மணி லாவண்யா சங்கரனின் முதல் சிறுகதை தொகுப்பான <a href="http://belletrista.com/2009/issue1/reviews_9.html">The Red Carpet : Bangalore stories </a>பற்றிய விமர்சனம் வந்துள்ளது. விமர்சனம் என்ற முறையில் இல்லாமல் நூலை பற்றிய சிறு குறிப்பாகவே பெரும்பாலான பதிவுகள் அமைந்திருக்கின்றன. புதிய புத்தக அறிமுகங்களில் சகித்திய அகெதமி விருது பெற்ற Sashi Deshpande வின் In the country of Deceit என்ற நூல் இடம்பெற்றுள்ளது.</p>
<p><img class="aligncenter size-full wp-image-352" title="afghan1" src="http://nathiyalai.files.wordpress.com/2009/09/afghan11.jpg?w=500&#038;h=333" alt="afghan1" width="500" height="333" /></p>
<p>இவ்விதழின் மூலம் <a href="http://awwproject.wordpress.com/">Afghan Women’s Writing Project </a>என்ற வலைதளம் பற்றி தெரியவந்தது. இது அப்கான் பெண்களுக்கான எழுத்துப்பயிற்சி களமாக அமைந்திருக்கின்றது. இத்தளத்தின் குறிக்கோளும் இயக்கமும் பற்றி <a href="http://awwproject.wordpress.com/about/">இங்கு</a> வாசிக்கலாம். <em>‘தற்கொலை செய்து கொள்ள எங்கள் கிராமத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் இல்லாததாலும், விஷம் இல்லாததாலும் இவள் ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தாள்’</em> என்ற வரிகளை வாசிக்கும் போது அதிர்ச்சியாகவே இருந்தது. பெரும்பாலான கட்டுரைகள் அவ்வாராகவே இடம்பெற்றிருக்கின்றன. இப்பதிவில் வெளியாகிய <a href="http://awwproject.wordpress.com/category/roya/">ரோயாவின்</a> ஒரு கவிதை தமிழில்….</p>
<p><strong>ஆப்பிள் தோட்டம்</strong></p>
<p>என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாய்<br />
நம் அண்டைவீட்டுத் தோட்டத்தில்<br />
நான் பயத்தோடு இருந்ததை நீ அறியவில்லை<br />
ஒரு அப்பிளை திருடினேன்<br />
தோட்டக்காரன் கோபத்தோடு<br />
என்னை துரத்திக்கொண்டு ஓடிவந்தான்<br />
உன் கைகளில் அப்பிள் இருப்பதை கண்டு<br />
என்னை திரும்பிப்பார்த்தான்<br />
நீ கடித்த ஆப்பிள் உன் கைகளிலிருந்து நழுவியது<br />
சென்றுவிட்டாய்…<br />
வருடங்கள் கடந்தும்<br />
உன் காலடித்தடங்கள்<br />
என்னுள் பதிந்திருக்கின்றன<br />
காயப்படுத்துகின்றன<br />
ஏனென்று வியக்கிறேன்</p>
<p>பெண் எழுத்தாளர்களின் இப்புதிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவர்கள் தொடர்ந்து இதே வேகத்துடன் செயல்படவும், பல படைப்புகளை வெளிகொண்டுவரவும், உலகெங்கிலும் உள்ள ஏராளமான பெண் எழுத்தாளர்களை உலகிற்கு அறியத்தரவும் வாழ்த்துவோம்.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/349/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=349&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/09/23/women-writers/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/09/afghan11.jpg" medium="image">
			<media:title type="html">afghan1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வலியோடு முறியும் மின்னல் &#8211; பிரான்சிஸ் கிருபா</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/09/03/valiyoodu-muriyum-minnal/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/09/03/valiyoodu-muriyum-minnal/#comments</comments>
		<pubDate>Thu, 03 Sep 2009 05:30:12 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[பிரான்சிஸ் கிருபா]]></category>
		<category><![CDATA[ரசித்த கவிதைகள்]]></category>
		<category><![CDATA[வாசித்த நூல்கள்]]></category>
		<category><![CDATA[kavithai]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=340</guid>
		<description><![CDATA[
நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.
 
எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=340&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="aligncenter size-full wp-image-341" title="10069" src="http://nathiyalai.files.wordpress.com/2009/09/10069.jpg?w=251&#038;h=400" alt="10069" width="251" height="400" /></p>
<p>நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.</p>
<p> </p>
<p>எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல குற்ற உணர்வுகளில் சிக்கி தவித்து தன்னைத்தானே வதைத்துக்கொண்டிருக்கும் மனம். அப்படி தைத்துக்கொண்டிருக்கும் மனதை நீயேனும் ஏன் மன்னிக்கூடாது என கெஞ்சுகிறது இக்கவிதை.<br />
<strong> </strong></p>
<p><strong>கணங்கள்தோறும்<br />
என்னை நானே<br />
தண்டித்துக்கொண்டிருக்கும்<br />
போது….ஏன்<br />
நீயேனும் கொஞ்சம்<br />
என்னை மன்னிக்கக்கூடாது </strong></p>
<p> </p>
<p>பற்றிக்கொள்ள ஒரு விரல் தரும் ஆசுவாசத்தை, அதன் பின் முழுமையாய் உடனிருக்கும் மனிதனனப் பற்றிய நம்பிக்கையை அற்புதமாக நடைபடும் வழிகளையும், வீதியையும், நிலத்தையும் அவள் இல்லாமல் தான் தனித்து நடக்கும் வேதனையின் துணைக்கு புகுத்தியிருக்கிறார் இக்கவிதையில்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>நடைபடும் வழிகள்<br />
கடைகள் வரை நினைக்கின்றன<br />
பிள்ளைகள் பற்றிக்கொள்ள<br />
ஒருவிரல் போதுமென்று </strong></p>
<p><strong>ஒற்றை விரலக்குப் பின்னே<br />
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்<br />
வீணாயிருப்பதை<br />
விளக்க முயல்கிறது வீதி </strong></p>
<p><strong>முயன்றாலும்<br />
நான் மட்டும் நீயின்றி நடந்தால்<br />
ஏனென்றே தெரியாமல்<br />
வலியில் துவள்கிறது நிலம்</strong>.</p>
<p> </p>
<p>ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாத நிலையில் கைமீறிப்போகின்ற காலத்தை நிறுத்தமுடியாமல் தவிக்கும் மனங்களை பற்றிய கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நீங்கிப்போகின்றவைகளை விதவிதமாக இப்படி எழுதி வாசித்துக்கொள்ள மட்டுமே முடியும் என்று சொல்லித் தேற்றிக்கொள்ள நன்றாகத்தானிருக்கிறது.</p>
<p><strong> </strong></p>
<p><strong>இரவின் ஜன்னல் வழியே<br />
எட்டிப்பார்க்கின்றன கனவுகள்<br />
நேரம் காலமறியாமல்<br />
விடிந்துவிடுகிறது பொழுது.<br />
முகத்தை சுளித்துத் திருப்பிக்கொள்கின்றன கனவுகள்.<br />
காலையில் ஏந்தும்<br />
முதல் காப்பிக் கோப்பையில்<br />
கனவுப் பிணங்கள் இறந்து மிதக்கின்றன.<br />
ஈயைப்போல் எடுத்துத் தூரப் போடவோ<br />
அல்லது புகாரோடு<br />
அந்த காப்பியை நிராகரிக்கவோ<br />
முடியாமல் தவிக்கும்போது<br />
ஆறிப்போகிறது அன்றைய சூரியன்</strong></p>
<p> </p>
<p>எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான அல்லது ஆசைப்படும் வாழ்வெனினும் ஏங்கித்தவிக்க தவராமல் வாய்க்கிறது யாவருக்கும். மர நாற்காலியை மட்டுமல்லாத மனித மனதின் ரணங்களை, இயலாமைகளை, ஏமாற்றங்களை, வாய்க்கப்பெறாதவைகளை இன்னும் எத்தனையோ வலிகளை தன்னுள் கொண்டுள்ளது இக்கவிதை.</p>
<p><strong><em>பார்வை</em></strong></p>
<p><em><br />
</em><strong>ஆளற்ற கூடம்<br />
அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.<br />
அதன் மேல்<br />
வயலினை சாய்த்து வைத்துவிட்டு<br />
வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.<br />
‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி<br />
செல்லமாக தோளில் ஏந்து வைத்து<br />
ரம்பத்தால் வருடினால் என்ன’<br />
என்பது போல் யாரையோ<br />
பார்க்கிறது மர நாற்காலி.<br />
எதிரே திறந்திருக்கிறது<br />
இசைக் குறிப்பு புத்தகம். </strong></p>
<p> </p>
<p>நிறைய கவிதைகள் இத்தொகுப்பில் பிடித்திருந்தாலும் இக்கவிதையே என்னை மிகவும் ஈர்த்தது. மனதை பக்குவப்படுத்திக்கொள்ள பயன்படும் உன்னத கவிதையாக தோன்றுகிறது இது. துயரம் மிகுகையில் வார்த்தைகள் இத்தனை கச்சிதமாக தங்களை கோர்த்துக்கொள்ளுமோவென வியக்கவைத்தது.</p>
<p><strong> </strong></p>
<p><strong>முத்தமிட்டு என்னை<br />
சாம்பலாக்கித் தந்துவிட்டு<br />
கவலைப்படும் பூக்களாக<br />
உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது….<br />
இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்,<br />
கொலை வாள் நீட்டி<br />
மன்னித்துக் காட்டிய வழியில்</strong></p>
<p> </p>
<p>அடிகோடிட்ட வரிகளையெல்லாம் மீண்டும் வாசிக்கையில் எங்குமே சந்தோஷமான வரிகள் காணக்கிடைக்கவில்லை. சந்தோஷங்கள் எளிதில் கடந்து விடுகின்றனவோ, துக்கங்களும் அவநம்பிக்கைகளும் மட்டுமே சற்று தங்கிச்செல்கின்றனவோ எனத் தோன்றியது. வியக்க வைக்கும் உவமைகளைகொண்டு துயரங்களை பதித்திருக்கிறார் நிறைய கவிதைகளில். அவற்றில் சில வரிகள்…..<br />
<strong> </strong></p>
<p><strong>கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்<br />
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன<br />
மின்னல் கொடியிழுந்து<br />
மேக ரதம் செலுத்தும் கற்பனையை<br />
மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கினேன்.<br />
</strong><strong> </strong></p>
<p><strong>**<br />
</strong></p>
<p><strong>கோபத்தை என்மீது துப்பிவிட்டுப் போகிறாய்<br />
எச்சில் துளிகள் துப்பல் தொகுப்பில் இயல்பாக உலரும்.<br />
அதைத் துடைத்தொழிக்க அவசரப்படமாட்டேன்<br />
</strong><strong> </strong></p>
<p><strong>**<br />
</strong><strong> </strong></p>
<p><strong>பெருஞ்சிரத்தையோடு வடிகட்டிய வெளிச்சத்தில்<br />
பிச்சைப் பாத்திரம் நிரம்பிய பின்னும்<br />
குருடனாகக் கெஞ்சும் உன் அறையை விட்டு<br />
வெளியேறவே முதலில் விரும்புகிறேன்<br />
</strong><strong> </strong></p>
<p><strong>**</strong></p>
<p><strong><br />
</strong><strong>பொறுக்க ஏலாமல்<br />
அகதியான நாளின் நுனியில்<br />
கூடடைந்த மலைத் தேனீக்களாய்<br />
இதயத்தை மொய்த்துக் குமையும்<br />
ஆயிரமாயிரம் வார்த்தைகள்<br />
</strong><strong> </strong></p>
<p><strong> </strong><strong>**</strong></p>
<p><strong> </strong><br />
<strong><em>“தேவைகள் எல்லாச் சமயங்களிலும் காலைப்பிடித்து தூக்கிவிடுகின்றன பலவீனமான தீர்மானங்களை”, “என்னைக்காணாமல் நகங்களைக் கடித்து இன்னும் கொஞ்சம் துப்பியிருக்கலாம் நீ “, “சூரியனை நம்பக்கூட தயக்கமாக இருக்கிறது சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில் “, “மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்” </em></strong>என்று வெவ்வேறு கவிதைகளில் குறிப்பிடும்போது ஒரே மனம் தன் நிலைகளுக்கும் சூழலுக்கும் சம்பவங்களுக்கும் ஏற்ப எவ்வாறாக வேறுபடுகின்றதென்பதை அறியமுடிகின்றது.</p>
<p> </p>
<p>இத்தொகுப்பில் தாங்கமுடியாத பரிசு, மரணத்தின் நிறம், கதிர் ரோமங்கள் கருகும் மெழுகுவர்த்தி, ஆளொழிந்த வீட்டில், தீயின் இறகு, புகைச்சித்திரம், கிளிகளின் தொலைபேசியில், முத்தமிட, வானத்தைத் தோற்றவன், எதிர்மிச்சம், கடலுக்குப் பெயர் வைக்கவேண்டும் போன்ற கவிதைகளும் மேலும் பல தலைப்பில்லா கவிதைளும் மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கின்றன.<br />
<strong><em> </em></strong></p>
<p><strong><em></em></strong></p>
<p><strong><em>&#8216;அதிகரித்து வருகிறது முன்னறிமுகமில்லா ஒரு புன்னகைக்கான நிச்சயம்&#8217;</em></strong> என்னும் பிரான்சிஸ் கிருபாவின் வரிகளுக்கேற்பவே இத்தொகுப்பை வாசிக்கும் போது நிறைவுப்புன்னகைகான நிச்சயம் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது பக்கங்கள் நகர்ந்துக்கொண்டிருக்க.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/340/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/340/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/340/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/340/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/340/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/340/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/340/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/340/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/340/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/340/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=340&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/09/03/valiyoodu-muriyum-minnal/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/09/10069.jpg" medium="image">
			<media:title type="html">10069</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>The Match Factory Girl (Finnish, 1990)</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/08/31/match-factory-girl/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/08/31/match-factory-girl/#comments</comments>
		<pubDate>Mon, 31 Aug 2009 05:05:33 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[Aki Kaurismaki]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=337</guid>
		<description><![CDATA[எவ்விதமான சலனங்களோ, களிப்புகளோ, ஆரவாரங்களோ, நண்பர்களுடனான விவாதங்களோ, அரட்டைகளோ, இல்லாத ஒரே மாதிரியான இயந்திர வாழ்வு எத்தனைச் சலிப்பு மிக்கதாய் இருக்கும்!. அதுவும் இளமைக்காலங்களில் அத்தகையத் தனிமை ஒரு சாபமே. அவளுக்கான வாழ்வும் அத்தகையதே. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை, பேருந்து பயணம், பயணத்தின் துணையாக புத்தகங்கள், வீடு திரும்பியதும் சமையல் மற்றும் பிற வேலைகள், கிளப், பியர் மீண்டும் மறுநாள் காலை தொழிற்சாலை. தொடரோட்டமாக இப்படியே நகர்ந்துக்கொண்டிருக்கும் வாழ்வில் அவள் புன்னகைக்க கூட காகித மாந்தர்கள் மட்டுமே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=337&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="aligncenter size-full wp-image-338" title="the-match-factory-girl_000" src="http://nathiyalai.files.wordpress.com/2009/08/the-match-factory-girl_000.jpg?w=300&#038;h=429" alt="the-match-factory-girl_000" width="300" height="429" />எவ்விதமான சலனங்களோ, களிப்புகளோ, ஆரவாரங்களோ, நண்பர்களுடனான விவாதங்களோ, அரட்டைகளோ, இல்லாத ஒரே மாதிரியான இயந்திர வாழ்வு எத்தனைச் சலிப்பு மிக்கதாய் இருக்கும்!. அதுவும் இளமைக்காலங்களில் அத்தகையத் தனிமை ஒரு சாபமே. அவளுக்கான வாழ்வும் அத்தகையதே. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை, பேருந்து பயணம், பயணத்தின் துணையாக புத்தகங்கள், வீடு திரும்பியதும் சமையல் மற்றும் பிற வேலைகள், கிளப், பியர் மீண்டும் மறுநாள் காலை தொழிற்சாலை. தொடரோட்டமாக இப்படியே நகர்ந்துக்கொண்டிருக்கும் வாழ்வில் அவள் புன்னகைக்க கூட காகித மாந்தர்கள் மட்டுமே உதவுகின்றனர்.</p>
<p>சம்பளம் வாங்கிய நாளில் கடையில் பார்த்த தனக்குப் பிடித்த உடையை வாங்கிக்கொண்டதற்கு தாய் அவளை அடித்தும், தந்தை அதை திருப்பி கொடுத்துவிட்டு வரும்படி அதட்டியும் கேளாமல் அவ்வுடை அணிந்து கொண்டு கிளப்பிற்குச் செல்கிறாள். அங்கு ஒருவன் அவளிடம் வந்து அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போகிறான். அடுத்தநாள் காலை அவள் படுக்கைக்கு அருகில் இருக்கும் மேசையில் பணம் வைக்கப் பட்டிருக்கிறது. அவள் அவ்வீட்டைவிட்டு கிளம்பும் முன் தன் தொடர்பு எண்ணை எழுதி தன்னை அழைக்கும்படி குறிப்பெழுதி வைத்து விட்டு வந்துவிடுகிறாள்.</p>
<p>அதுவரை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தவளுக்கு அவனின் வருகை மாற்றங்களை அளிக்கிறது. அவன் தன்னை தொடர்பு கொள்வான் எனக் காத்திருந்து ஏமாற்றமடைகிறாள். சில நாட்களில் தான் கருவுற்றிருப்பதையும் அறிகிறாள். இச்செய்தியை பகிர்ந்து கொள்ளக்கூட அவளுடன் ஒருவரும் இல்லை. தன்னுடன் பணிபுரியும் பெண்ணிடம் இதைக்கூற அவள் அப்படியா என்று கேட்டுவிட்டு நகர்கிறாள். தன் நிலையைப்பற்றி விரிவாக அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதற்கு பதில் கடிதமாக அவன் காசோலையை அனுப்பி வைக்கிறான். பின் எவ்வாறாகத் தன் வாழ்க்கையை எதிர்கொள்கிறாள், எப்படி செயல்படுகிறாள் என்பதே பிற்பகுதிக் கதை.</p>
<p>சாதாரண கதைதானெனினும் செய்வதற்கு வேறு எதுவுமே இல்லாத அல்லது வேறு எதுவுமே செய்யத்தோன்றாத அமைதியான ஒரு பின்மதியப்பொழுதில் வசனங்கள் மிகக்குறைவான இப்படம் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. தனக்காக யாருமே இல்லாதவளுக்காக உதிர்க்கப்படும் ஒரு சிறு புன்னகையும் கூட எத்தனை அடர்த்தியும் வலிமையும் மிக்கதாக மாறிவிடுகிறது!. அது அவளுள் எத்தனை நம்பிக்கையும் பிடிப்பையும் வளர்த்துவிடுகிறது! என்பதை அவள் அவனுக்கு எழுதும் கடிதம் உணர்த்துகின்றது.</p>
<p>ஒரே மாதிரியாக தொடரும் வாழ்க்கை ஓரிரவில் அவளுக்கு மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது எனினும் சில நிகழ்விற்கு பின் மீண்டும் அதே சுழற்சியில் இயங்கத் தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள். எல்லா உணர்வு வெளிப்பாடுகளும் சிறு புன்னகையைக் கொண்டோ அல்லது ஒரு துளி கண்ணீரைக் கொண்டோ மிதமாகவே காட்டப்பட்டிருக்கிறது.</p>
<p>Aki Kaurismaki எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்களும் மிகக் குறைவு. எவ்வித மிகைப்படுத்தல்களும் அதீதங்களுமில்லாமல் மௌனமாகக் கதையை நகர்த்தியிருப்பதே இதை முழுவதுமாக பார்க்கச்செய்தது. In focusல் இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரின் The Man without a past (2002), Lights in the dusk (2006) படங்கள் ஒளிபரப்பப்பட்ட போது பார்க்க இயலாமல் போனது இப்போது வருத்தமாகவே உள்ளது.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/337/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/337/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/337/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/337/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/337/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/337/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/337/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/337/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/337/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/337/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=337&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/08/31/match-factory-girl/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/08/the-match-factory-girl_000.jpg" medium="image">
			<media:title type="html">the-match-factory-girl_000</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Offside</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/08/27/offside/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/08/27/offside/#comments</comments>
		<pubDate>Thu, 27 Aug 2009 06:10:19 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[Persian (Iran) Films]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[Jafar Panahi]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=331</guid>
		<description><![CDATA[தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.
2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=331&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="aligncenter size-full wp-image-330" title="offside" src="http://nathiyalai.files.wordpress.com/2009/08/offside.jpg?w=500&#038;h=709" alt="offside" width="500" height="709" />தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.</p>
<p>2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் வாகனங்களில் பயணிக்கின்றனர். சில ஆண்கள் இவர்களை பெண்கள் என்று கண்டுபிடித்தும் எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். அதிக கட்டணத்தில் கருப்பில் டிக்கட் எடுத்து நுழைந்தும் சில பெண்கள் பிடிபட்டுவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட ஆறு பெண்களை கொண்டு கதையை இளமைத் துள்ளளோடு சொல்லி இருக்கிறார் Jafar Panahi.</p>
<p>பிடிபட்டுவிட்டோமே என்ற கவலை சிறிதும் இல்லாது ஆட்டம் என்னவாகும், யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலும், அவர்களை பிடித்து வைத்திருக்கும் காவலதிகாரிகளை கிண்டல் செய்துக்கொண்டும், ஒவ்வொருவராய் வந்து சேரும் பிடிபட்ட பெண்களை வரவேற்றபடியும், அரங்கத்தில் ஓசை எழும்போதெல்லாம் அங்கிருக்கும் காவலதிகாரியை என்னவானது என்று பார்த்து கூறும்படி ஏவியும், அவர்களை அதட்டும் அதிகாரியிடம் திரும்பத்திரும்ப வாயடித்துக்கொண்டும் பரபரப்பான ஆரவாரத்தோடு நகர்கிறது படம்.</p>
<p>பெண்களுக்கென்று தனி கழிப்பறை இல்லாத இடத்தில், பிடிபட்ட பெண்ணொருத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்ல அவளை யார் கண்ணிலும் படாதவாறு அழைத்துச்செல்ல ஒரு காவலதிகாரி படும் அவஸ்தைகளும், ஆண்கள் கழிப்பறையில் அவன் மெனக்கெடல்களும், அதனால் அவன் சந்திக்க நேரும் கடுப்புகளும் வசவுகளும் பின் அவள் கழிப்பறையிலிருந்து தப்பித்து சென்றுவிட்ட ஏமாற்றத்தையும் நகைச்சுவையோடு அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>காவலதிகாரிகளாக நடித்திருந்த எல்லோரும் வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றனர். அங்கு சென்று அவர்கள் உயிரை எடுப்பதை விட வீட்டிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாமே என்ற எரிச்சலும் இந்தக்கூட்டத்தில் வந்து இப்படி அகப்பட்டு கொண்டுவிட்டனரே என்ற கரிசனமும் கலந்த உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கென கமென்ட்ரி சொல்லவும் ஒருவன் ஒப்புக்கொள்கிறான். அவர்களின் தலைமை அதிகாரியின் ஆனைக்கு உட்பட்டே இவர்களை பிடித்து வைத்திருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு அதில் அத்தனை ஈடுபாடில்லை என்பதும் அவர்கள் செய்கையிலிருந்து விளங்குகிறது.</p>
<p>தன் பெண் அங்கு சென்றிருக்கக்கூடும் என்று தேடிக்கொண்டு வரும் ஒரு பெரியவர் பெண்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று காவலதிகாரியிடம் விசாரிப்பது பரிதாபமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாக பார்வையிடும் அவர் தன் பெண்ணின் தோழியை அடையாளம் கண்டுக்கொண்டு இதென்ன வேஷம் இதற்கு தானா உங்களை படிக்க அனுப்புகிறோம் என்று அவளை அடிக்கச்செல்கிறார். காவலதிகாரிகள் அவரை தடுத்து சமாதானம் கூறி அனுப்பும் காட்சியும் சிறப்பானது.</p>
<p>ஏன் மற்ற நாட்டு பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர், இரானிய பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஒரு பெண் வினவ கூட்டமாக ஆட்டத்தை காணவரும் ஆண்கள் அவர்களை கேலி செய்ய கூடுமென்றும், ஏராளமான கெட்ட வார்த்தைகள் கேட்க நேரிடும் என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதியே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஒரு காவலதிகாரி சொல்கிறான். பிற நாட்டு பெண்களுக்கு அவர்கள் மொழி தெரியாததால் மோசமான வசவுகளும் வார்த்தைகளும் அவர்களுக்கு புரியாது என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறான். கழிப்பறைக்கு அழைத்துச்சென்ற காவலன் அப்பெண்ணின் கண்களை மூடிக்கொள்ள சொல்கிறான் கழிப்பறை சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மோசமான வார்த்தைகளை அவள் படிக்கக்கூடாதென்பதற்காக. இப்படி போர்த்தி போர்த்தி பாதுக்காப்பாக வளர்க்கப்படும் பெண்களின் மனநிலை எவ்வாறாக இருக்கும்?</p>
<p>விளையாட்டு முடிய சிறிது நேரம் இருக்கும்போதே உயரதிகாரி அங்கு வந்து அவர்களை தலைமைச்செயலகத்துக்கு அழைத்து வரும்படி கூற எல்லோரும் சிற்றுந்தில் ஏற்றப்படுகின்றனர். அத்தனை நேரம் கேலியும் கிண்டலுமாக இருந்த பெண்கள் சற்று இறுக்கம் கொள்வதும், அவர்களுடன் ஏற்றப்படும் மற்ற பையனின் உரையாடல்களும், அதிகாரியின் உடையணிந்து ஆண் வேடம் இட்டு வந்த பெண் தனக்கு மட்டும் தண்டனை கூடுதலாக இருக்கும் என்று வருத்தம் கொள்ளுதலும், வழியில் தங்கள் வீடு வந்து விட்டதாகவும் தான் இங்கு இறக்கி நடந்து சென்று விடுவேன் என்று தன்னை இறக்கிவிடும் படியாக கோறும் பெண்ணின் அப்பாவித்தனமும், அவளை கேலி செய்யும் மற்ற பெண்களின் உரையாடல்களும், வண்டியில் அவர்கள் கமென்ட்ரி கேட்க ஏண்டனாவை பிடித்துக்கொண்டே வரும் காவலதிகாரியின் கரிசனமும், ஆட்டத்தின் இறுதி நேர பதட்டமும், இறந்து போன தனது நண்பனின் நினைவிற்காகவே முதல் முறையாக தான் அரங்கத்திற்கு வர முயற்சித்தகாக கூறும் பெண்ணின் நெகிழ்ச்சியும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன.</p>
<p>எந்த ஒரு பெண்ணின் பெயரும் சொல்லப்படவில்லை இப்படத்தில். புகைபிடிப்பதாக வரும் பெண்ணின் அடாவடித்தனமான கிண்டலும், சுட்டிதனமும், மிகுந்த பேச்சுக்களும் அபாரம். இறுதியில் சுபமாகவே முடிக்கப்பட்ட இப்படம் நமது கல்லூரிகால கலாட்டாக்களையும் சேட்டைகளையும் நினைவூட்டத் தவறவில்லை.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/331/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/331/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/331/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/331/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/331/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/331/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/331/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/331/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/331/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/331/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=331&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/08/27/offside/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/08/offside.jpg" medium="image">
			<media:title type="html">offside</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>The Band&#8217;s Visit</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/08/25/317/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/08/25/317/#comments</comments>
		<pubDate>Tue, 25 Aug 2009 05:24:03 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[Arabic (Israeli) Film]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[Eran Kolirin]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=317</guid>
		<description><![CDATA[
இஸ்ரேலிய இயக்குனரான Eran Kolirin எழுதி இயக்கிய முதல் திரைப்படமான The Band’s Visit ஐ சென்ற வாரம் காண நேரிட்டது. 2007ல் வெளிவந்த படமிது. அரபு மொழிப்படமென்றாலும் பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தன. எளிமையான திரைக்கதையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இதன் இயக்குனர்.
எந்த ஊரானாலும், என்ன மொழி பேசினாலும், எல்லா மனித மனங்களும் அதன் அடி வேர்களில் துயரையே சுமந்துக்கொண்டு அலைகின்றனவோ எனத் தோன்றுகிறது.  நமக்கு தெரிந்தவர்களிடம் நமக்கான ஒரு போலி முகத்தை உருவாக்கிக்கொண்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=317&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><img class="aligncenter size-full wp-image-318" title="BandsVisitPoster" src="http://nathiyalai.files.wordpress.com/2009/08/bandsvisitposter.jpg?w=325&#038;h=470" alt="BandsVisitPoster" width="325" height="470" /></p>
<p>இஸ்ரேலிய இயக்குனரான Eran Kolirin எழுதி இயக்கிய முதல் திரைப்படமான The Band’s Visit ஐ சென்ற வாரம் காண நேரிட்டது. 2007ல் வெளிவந்த படமிது. அரபு மொழிப்படமென்றாலும் பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தன. எளிமையான திரைக்கதையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இதன் இயக்குனர்.</p>
<p>எந்த ஊரானாலும், என்ன மொழி பேசினாலும், எல்லா மனித மனங்களும் அதன் அடி வேர்களில் துயரையே சுமந்துக்கொண்டு அலைகின்றனவோ எனத் தோன்றுகிறது.  நமக்கு தெரிந்தவர்களிடம் நமக்கான ஒரு போலி முகத்தை உருவாக்கிக்கொண்டு அதுவே நீடிக்க வேண்டுமென்பதற்காக அந்த நேர உணர்வுகளைக் கூட அப்படியே வெளிக்காட்டிக்கொள்ளாமல் போலிப் புன்னைகையுடனேயே திரிகிறோம். ஆனால் எங்கோ முகம் தெரியாத ஊரில்  முன்பின் அறிந்திடாத ஒரு நபரிடம் எந்தப் போலித்தன்மையுமில்லாமல் நம்மை துயரில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் அல்லது உறுத்திக்கொண்டிருக்கும் சோகங்களை எவ்விதத் தயக்கமுமின்றி எதிர்பாராவிதமாகக் கொட்டிவிட முடிகிறது. </p>
<p>எகிப்து நாட்டின் காவல் துறையிலிருக்கும் எட்டு நபர் கொண்ட ஒரு இசைக்குழு அரபு கலாச்சார மையத் திறப்பு விழாவிற்கு  இசை நிகழ்ச்சி நடத்த வரவழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் இஸ்ரேலில் வந்து இறங்கியதும் அவர்களை வரவேற்க யாரும் வரவில்லை.  தாங்களே பேருந்தை பிடித்து  ஓரிடத்தில் இறங்கி அங்கிருக்கும்  சிறிய உணவகத்தை நடத்திவரும் பெண்ணிடம் விசாரிக்கும் போதுதான் தாங்கள் இடம் தவறிவிட்டதை அறிகின்றனர்.</p>
<p>அவர்கள் வந்து இறங்கியதுதான் அன்றைக்கான கடைசி பேருந்தென்பதால் அவர்களுக்கான உணவையும் தங்குவதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்கிறாள் அப்பெண்மணி.  அவள் வீட்டில் இருவரும், அங்கிருக்கும் மற்ற இரண்டு நபர்கள் வீட்டில் பிறருமாக அக்குழுவில் உள்ளவர்கள் தங்குவதற்குச் செல்கின்றனர். </p>
<p>அந்த ஓரிரவில் பரிமாறிக்கொள்ளப்படும் பரிவுகளும், அனுபவங்களும், உணர்வுகளும், கரிசனங்களும், உதவிகளும் நகைச்சுவை கலந்த மென்சோகத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றது. </p>
<p>உடன் சுமக்க வருபவர்களிடம் கொட்டித்தீர்க்காத எதைஎதையோ எதேச்சையாய் எதிர்படும் ஏதோ ஒரு தோளில் இறக்கிவைத்து இளைப்பாறுவது போல் அவர்கள் கடந்து வந்த பாதையின் நிழல்களை, தயக்கங்களை, ஏமாற்றங்களை, ஏக்கங்களை, விரக்திகளை, நெகிழ்ச்சிகளை, முயற்சிகளை, தங்களின் குற்ற உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வதை நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தியிருப்பது அழகு. </p>
<p>அடுத்த நாள் காலை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று அங்கு அருமையான இசையுடன் கூடிய ஒரு பாடலைப்பாடி படத்தை நிறைவு செய்கின்றனர்.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/317/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/317/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/317/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/317/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/317/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/317/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/317/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/317/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/317/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/317/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=317&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/08/25/317/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/08/bandsvisitposter.jpg" medium="image">
			<media:title type="html">BandsVisitPoster</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வட்டம்</title>
		<link>http://nathiyalai.wordpress.com/2009/08/19/the-circle/</link>
		<comments>http://nathiyalai.wordpress.com/2009/08/19/the-circle/#comments</comments>
		<pubDate>Wed, 19 Aug 2009 04:58:54 +0000</pubDate>
		<dc:creator>nathiyalai</dc:creator>
				<category><![CDATA[Persian (Iran) Films]]></category>
		<category><![CDATA[திரைப்படம்]]></category>
		<category><![CDATA[Jafar Panahi]]></category>

		<guid isPermaLink="false">http://nathiyalai.wordpress.com/?p=308</guid>
		<description><![CDATA[The Circle

இரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எளிமையான வாழ்வையும் அன்பையும் மட்டுமே பேசுபவை என்ற எதிர்ப்பார்ப்பில் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.  தனித்து ஆக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான வாழ்வை தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் என பலரின் வாழ்வில் சில நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நம்மையும் பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.  அவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? இதற்கு முன் எப்படி இருந்தனர்? இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும்? என்கிற பல [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=308&subd=nathiyalai&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>The Circle</strong></p>
<p><img class="aligncenter size-full wp-image-310" title="The Circle" src="http://nathiyalai.files.wordpress.com/2009/08/the-circle.jpg?w=336&#038;h=475" alt="The Circle" width="336" height="475" /></p>
<p>இரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எளிமையான வாழ்வையும் அன்பையும் மட்டுமே பேசுபவை என்ற எதிர்ப்பார்ப்பில் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.  தனித்து ஆக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான வாழ்வை தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் என பலரின் வாழ்வில் சில நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நம்மையும் பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.  அவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? இதற்கு முன் எப்படி இருந்தனர்? இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும்? என்கிற பல கேள்விகளை நமக்குக் கொடுத்துவிட்டு வழிபோக்கர்களை போல் சில நிகழ்வுகளை மட்டுமே பார்க்கத் தந்திருக்கிறார். </p>
<p>The Mirror, The White Balloon போன்ற படங்களை மகிழ்வோடும் சிறுவர்களின் நடிப்பை சிலாகித்து பிரம்மிப்போடும் பார்த்து விட்டு இப்படத்தை பார்க்கும் போது ஒரு வித அச்சமே மேலோங்கி இருக்கிறது.  ஆண்வயமான சமூகத்தில் பெண்கள் தனித்து இயங்குவதென்பது அத்தனை எளிதானதாக இல்லையெனினும், பல போராட்டங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதே ஆசுவாசமானதாக இருக்கிறது. </p>
<p>ஒரு பெண் பெண்குழந்தையை பிரசவிக்கிறாள் என்ற செய்தியுடன் படம் துவங்குகிறது.  அவளின் தாய் கவலைபடுகிறார்.  ஆண் பிள்ளை பிறக்கும் என்றார்கள் இப்போது அவள் கணவரின் வீட்டாரிடன் எப்படி சொல்லி சமாளிப்பது என் வருந்துகிறார். </p>
<p>சிறையில் இருந்து தப்பி வந்த பெண்களின் கைகளில் பணமில்லாத திண்டாட்டம், விடுதலையாகி வந்த பெண்களின் வீட்டாரின் அனுகுமுறை, அவர்கள் தங்கள் வாழ்க்கையோடு செய்துக்கொள்ளும் சமரசங்கள், ஆண் இல்லாமல் தனித்து குழந்தையை வளர்க்க முடியாமல் தெருவில் சிறு குழந்தையை விட்டுவிட்டு ஓடவேண்டிய கட்டாயம், இந்தச் சிரமங்களை அறிந்து கருவிலேயே குழந்தையை கலைக்க நினைப்பவளின் தோல்விகள் என பலரின் துயரங்களில் ஒரு சிறு பகுதியை காட்டியிருக்கிறது இப்படம்.  இவையெல்லாம் ஒரே பெண்ணின் வாழ்வின் பல கட்டங்களில் சந்திக்க நேரும் துயரங்கள் எனவும் பல பெண்களின் வாழ்க்கை முறை இப்படித் துயர்மிகுந்ததாகத் தானிருக்கிறது எனவும் கொள்ளலாம்.</p>
<p>இறுதியாக ஒரு பாலியல் தொழிலாளியை பிடித்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர்.  அங்குள்ள காவலதிகாரி ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவள் இங்கு இருக்கிறாளா என்று வினவுகிறார்.  படம் அத்துடன் நிறைவு பெறுகிறது.  அது படத்தின் ஆரம்பத்தில் பெண் பிள்ளையை பிரசவித்ததாக காட்டும் பெண்ணின் பெயர். </p>
<p>எல்லோரும் வாழத்தானே பிறந்திருக்கிறோம். பிறகு ஏன் சூழ்நிலைகள் இப்படி தடம்புரட்டிச்சிரிக்கின்றது. அந்த ஒரு பெயரின் உச்சரிப்பில் முழு படத்திற்கான நோக்கம் பொதித்து வைக்கப்பட்டிருகின்றதோவென எண்ணத்தோன்றியது.  எத்தனை பெரிய விஷயத்தை சோகத்தை அவலத்தை ஒரு பெயரின் உச்சரிப்பில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இதன் இயக்குனர் Jafar Panahi என்று வியப்பாகவும் இருந்தது. இதுதான் அவர்களின் வட்டம் அவர்களுக்கான வாழ்வு. </p>
<p>Jafar Panahi யின் மற்ற படங்கள் The Wounded Heads, Kish, The Friend, The Last Exam, The White Balloon, Ardekoul, The Mirror, Crimson Gold &amp; Offside.</p>
  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nathiyalai.wordpress.com/308/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nathiyalai.wordpress.com/308/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nathiyalai.wordpress.com/308/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nathiyalai.wordpress.com/308/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nathiyalai.wordpress.com/308/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nathiyalai.wordpress.com/308/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nathiyalai.wordpress.com/308/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nathiyalai.wordpress.com/308/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nathiyalai.wordpress.com/308/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nathiyalai.wordpress.com/308/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nathiyalai.wordpress.com&blog=505583&post=308&subd=nathiyalai&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://nathiyalai.wordpress.com/2009/08/19/the-circle/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/c5772186b89bb606740104001dcc961b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">nathiyalai</media:title>
		</media:content>

		<media:content url="http://nathiyalai.files.wordpress.com/2009/08/the-circle.jpg" medium="image">
			<media:title type="html">The Circle</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>