தெய்வீகமானது
கற்பைப்போன்றது
காதலும் காமமுமற்றது
புனிதமானது
நட்பினும் மேலானது
பெயரற்றது
இதாலானது
அதாலானது
என்பன போன்ற
பிதற்றல்களையெல்லாம்
தூக்கி எறிந்துவிட்டு
வெறுமனே என்னிடம் வா
உறவை
உறவாலாக்குவதை
கற்றுக்கொண்டு
பின்
என் முகத்தில்
உமிழ்ந்து
விட்டுச்செல்
உமிழ்ந்து விட்டுச்செல்
ஜூன் 4, 2008 nathiyalai ஆல்
நல்லா வந்திருக்குங்க கவிதை.
காயமுற்ற மனதின் கசப்பா கவிதையானது? நல்ல கவிதை.
ஆணெனும் அதிகாரத்தின் மீதுமிழும் கவிதை
நல்ல கவிதை.
//உறவை
உறவாலாக்குவதை
கற்றுக்கொண்டு//
“நச்”
super
//உறவை
உறவாலாக்குவதை
கற்றுக்கொண்டு
பின்
என் முகத்தில்
உமிழ்ந்து
விட்டுச்செல்//
கற்பதற்காக உள்ள பாடத்திலும், கற்றுத் தருபவர்களிடமும், கற்பவர்களிடமும், சிக்கல் இருக்கிறது… இறுதியில் முகத்தில் உமிழ்ந்துவிட்டு செல்வதை தவிர்க்க இயலாது…
என்பதை உணர்த்தும் வரிகள், வேறொரு தளத்துக்கு அழைத்து செல்கிறது…
நீங்க கவிதைலாம் எழுதுவீங்களா?
உண்மையிலே ஆர்ப்பாட்டமில்லாத கவிதை
” உறவை
உறவாலாக்குவதை
கற்றுக்கொண்டு
பின்
என் முகத்தில்
உமிழ்ந்து
விட்டுச்செல் ”
🙂
மறுமொழியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் 🙂
உணர்வெழுச்சிகளைக்கொண்ட இக்கவிதையை உணர்வுதளத்தில் இல்லாமல் புரிந்துகொள்ள முயல்கிறேன். உறவு என்பது உணர்ச்சிகளின் மேற்ப்பூச்சே. இக்கவிதையி்ல் உறவின் திசைவழி ஒற்றையா? இருப்பதால் என்ன சாத்தியங்கள் நிகழும் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. உறவு என்பது எதிர்பார்ப்புகள் அல்லது ஒரு அடையாளத்துடனேயே உருவாகி இறுகுகிறது. அல்லது சமூகம் அதை அடையாளமிட்டே புரிந்துகொள்ள முயல்கிறது. அடையாளங்கள் எப்பொழுதும் சமூக மதிப்பீட்டைச் சார்ந்தவை. அதாவது கற்பு, காதல், காமம், புனிதம், நட்பு அல்லது பெயரற்ற இதால் அதால் ஆனது. அடையாளமற்ற உறவு எப்படி இருக்கும்? அது உறவுக்கானதாக இருக்கும் என்கிறது கவிதையின் குரல். கவிதையின் இந்த புள்ளியிலிருந்து விரிந்த செல்கிறது மற்றைய வரிகள். காதலுக்காக யாரையாவது காதலிக்க முடியுமா? என்கிற கேள்வியை எழுப்பி இதனுடன் ஒப்பு நோக்கலாம். காமத்தில் காதல் இல்லாமல் இருக்கலாம்.. காதலில் காமம் இல்லாமல் இருக்குமா? அதேபோல் உறவுகளில் உள்ளார்ந்து இருப்பது ஒருவகை வேட்கை. அந்த வேட்கையில் உறவு மட்டுமே இருப்பதுதான் உண்மையான மனிதநேயம். ஆனால் அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்பதுதான் இன்றைய சிக்கலே.
இறுதி வரிகளான “முகத்தில் உமிழ்ந்து விட்டுச் செல்“ என்பதில்தான் உறவை உறவாலாக்குதலும் ஒரு மதீப்பீட்டிற்கு உட்படுவதை சொல்கிறது. அடையாளமற்ற இருத்தல் என்பதும் அடையாளமற்ற அல்லது எதிர்பார்ப்புகள் அற்ற உறவென்பதும் சாத்தியமா? என்பதாக இதனை வாசிக்கலாம். “வெறுமனே என்னிடம் வா“ இதுதான் முக்கியமான சாத்தியமின்மையைச் சுட்டுகிறது. இங்கு வெறுமனே வரும் ஒரு எதிர் உடல் ஏற்படுத்திக் கொள்ளும் உறவிற்குப்பின் வெறுமனே திரும்புவதில்லை. எப்படித் திரும்புகிறது சமூக மதிப்பீட்டை ஏற்று உமிழும் அதிகாரம் நிரம்பிய உடலாக. இங்கு எதிர்கொள்ளப்படும் ஒரு சிக்கல் உறவை உறவாக்குவதை கற்றுக்கொண்ட அந்த எதிர் உடல் உமிழும் நிலைக்கு செல்வதில்தான் உள்ளது. அந்த உறவில் அது கற்றுது என்பது அந்த உறவை ஏற்படுத்திய இரு உடல்களின் படித்தலில் உள்ள சிக்கலை சொல்வதாகிறது. அல்லது அந்த உறவின் சாத்தியம் என்பது மதிப்பீடுகளுக்கு அப்பால் சாத்தியமில்லை எனகிற எதிர்-வாசகமாக முடிகிறது. உமிழும் என்பது “காறி உமிழும்” என்பதையே குறிப்பதை “விட்டுச்செல்“ என்கிற வரிகளின் வெளிப்படும் விலக்குதல் என்கிற உணர்வு சொல்வதாகிறது.
இங்கு எழும் முக்கியப் பிரச்சனை.. உறவு என்பதில் எதிர்பார்ப்புகளின் பங்கு ஏன்? என்கிற கேள்விதான். ஒரு உடலுடன் பேசவும் பழகவும் சிலநேரம் இணைவு கொள்ளவும் வாய்ப்புள்ளபோது அது ஒரு உறவு என்கிற நிலையிலிருந்து ஏன் சமூக மதிப்பீடு கொண்ட ஒன்றாக மாறுகிறது. அல்லது சமூகம் அத்தகைய உறவை ஏன் உமிழ்வதாக அவமானத்திற்குரியதாக பார்க்கிறது. சமூகம் என்பது உடல்கள் அரைபடும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பின் மதிப்பீடுகள் இங்கு பிரச்சனைக்குள்ளாகின்றன. அந்தவகையில் இக்கவிதை முக்கியமான ஒரு எதிர்-மனவுணர்வை வெளிப்படுத்துகிறது.
nice poem
நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஜமாலன்…
நன்றி பாஷா.
கவிதையும் ஜமாலன் அவர்களின் கருத்தும் படித்ததில் நிறைவு.
முகத்தில் உமிழ்ந்து விட்டு செல்லும் போது சில வேளை அடயாளங்கள் பவித்திரமானது என்று தோன்றும். அடயாளங்கள் இயல்பை மறுதலிக்கும் போது உபத்திரங்கள் என்று தோன்றும். காதலும் அன்பும் மனிதநேயத்தை அடிப்படையாக கொண்டபோது ஓரளவு நிதானம் இருக்க வாய்பிருக்கின்றது இருந்தும் மனிதன் அடிப்படையில் விலங்கு என்ற உண்மையில் இருந்து விடுபட முடியாதவனே.
நன்றி நர்மதா.
//உறவை
உறவாலாக்குவதை
கற்றுக்கொண்டு//
.
உன்னதமான புரிதலோடு
.
.
.
ஒரு அழகான அழைப்பு!!!
.
//பின்
என் முகத்தில்
உமிழ்ந்து
விட்டுச்செல்//
அருமை… ரசித்தேன்!