காட்டழல்
காரணம் அறியாமல் பெருகும் கண்ணீருக்கு
ஆதரவாய் எனையே நாடுகிறாய்
துளைவழி கேட்கும் உனது கேவல்கள்
மரண ஓலத்தை நினைவூட்டி
அச்சுறுத்துகின்றன
உடனிருந்து அழும்போது
பகுத்துப்பார்க்கத்தெரிந்த மனதிற்கு
தொலைவொலி
பதறச்செய்வதாகவேயிருக்கின்றது
காற்றை மட்டுமே
போர்த்தி வாழும் இவ்வாழ்வில்
யாவும் கைகூடுமென்ற
என் அபத்த ஆறுதலுக்கான மறுமொழிகளை
எப்போதும் தயாராகவே வைத்திருக்கின்றாய்
எனினும்
காட்டழல் பாகுபாடின்றி
அனைத்தையும் சேர்த்தழிக்கும்
வித்தை அறிந்ததென்று
அமைதியாகின்றேன்
நல்லா இருக்குங்க.
நன்றி ஜெகதீசன்
நல்லா இருக்குங்க!
நன்றி சுகிர்தா