தாழ்வாரங்களை தாண்டி
வீட்டினுள் நுழைந்திட்ட
ஒன்றிரண்டு அட்டைகளை
காண நேரிடும்
அடைமழைக்காலத்து
பின்னிரவு பொழுதுகளில்
ஈரம் உலறாத
உடைகளின் வாடை
நாசியை நிறைக்க
உள்ளுக்குள் தேங்கி
விசும்புகின்ற எண்ணங்களை
கோர்த்து வலைப்பின்னி
சிக்கிய ஜீவன்களை
சிதைத்துக்கொண்டிருக்கும்
மனதினை
புறம் தள்ளி
காப்பாற்றுவதற்காகவாவது
துரோகம் பாவம்
இன்னபிறவற்றை
காலைக்கென ஒத்திவைக்க
பழகவிடு
அடைமழைக்காலம்
ஏப்ரல் 20, 2010 nathiyalai ஆல்
Good one.
நன்றி ஜெகதீசன்
After reading this i can feel some silence in my soul