அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’ தொகுப்பிலிருந்து…
தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும்
*******************
சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம்
திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்டு
மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவி
வணக்கம். கவிகோவின் கவிதை படிக்க படிக்க இனிமையைக் கொடுக்கும். தீக்குளியள் கவிதை அற்புதம்…
அன்பென்றால் அம்மா. அறிவென்றால் அப்பா, பண்பு பாசம்,என்றால் சகோதர சகோதரிகள், ivai anaiththum ontraga parkka venduma? un NANPANAI paar ……..
பால்வீதி புத்தகம் எங்கு கிடைக்கும்? வெகு நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.