Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பொது’ Category

பலவிதமான தமிழ் வலைப்பதிவுகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை மட்டுமே குறியாகக் கொண்டு ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எட்டுதிக்கும் என்கிற பெயரில் இயங்கும் இத்தளத்தில் மொழிபெயர்ப்பு முன்னொடியான ஏ.கே. ராமானுஜன் அறிமுகத்துடன் இரண்டு சங்கப்பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

8tikkum

ஆர்வமுள்ள நண்பர்கள் இதில் பங்களிக்குமாறு கீழ்கண்ட அறிமுகக் குறிப்பு தரப்பட்டுள்ளது.

அறிமுகம்

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், பாரம்பரீயமும் பேசி தனது மொழியை தானே உயர்த்திக்கொண்டு வாழும் “கிணற்றுத்தவளை” வாழ்வைவிட்டு வெளியேறி உலகின் எட்டுத்திக்கும் சுழற்றியடிக்கும் காற்றை, தென்றலை சுவாசிக்க வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியையும் புரிந்துகொண்டு அதனை நமது மொழிக்குள் கொண்டுவருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமே மொழிபெயர்ப்பு.

இவ்வலைப்பதிவு மொழிபெயர்ப்பிற்காகவென தனிக்கவனம் செலுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. நண்பர்கள் இப்பணியில் இணைந்து செயல்பட ettuththikkum@gmail.com மின்அஞ்சலில் தொடர்புகொண்டு தங்களது மொழி பெயர்ப்புகளை வலை ஏற்றலாம். விதிமுறை என்று எதுவும் இல்லை. அதிகபட்சம் இலக்கியம், கலை படைப்புகள் மற்றும் அவை சார்ந்த கோட்பாடுகள், உரையாடல்கள் மற்றும் விவாதங்களை மொழிபெயர்த்து வெளியிடலாம்.

  1. நீங்கள் மொழிபெயர்க்கும் படைப்பை அல்லது கட்டுரையை மூல மொழியுடன் அனுப்பினால் அதனை மொழிபெயர்ப்பில் திறமை உள்ள நண்பர்களிடம் தந்து சரிபார்த்து வெளியிடப்படும்.
  2. அரசியல் சார்ந்த மொழிபெயர்ப்புகளை தவிர்ப்பது நலம். கலை, இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்துதல் நலம்.
  3. கூடுமானவரை ஆங்கிலம்-தமிழ் அல்லது தமிழ்–ஆங்கிலம் என இருந்தால் சிறப்பு. பிறமொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படுபவை அம்மொழிதெரிந்த நண்பர்களிடம் தந்து சரிபார்க்கப்பட்டே வெளியிடப்படும். அதற்கு சற்று தாமதமாகலாம்.
  4. வருட இறுதியில் சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து நூலக வெளியிடும் எண்ணமும் உள்ளது. அதனால் கூடுமானவரை காப்பிரைட் பிரச்சனைகள் இல்லாமல் மொழிபெயர்ப்பது நல்லது. அப்படி மொழிபெயர்த்துவிட்டாலும், அதற்கான காப்பிரைட் பெற சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நாம் முயற்சிப்போம்.

மொழிபெயர்ப்பிற்கான ஒரு வலைப்பதிவாக இதனை துவக்கியுள்ளோம். துவக்கமாக எங்களால் இயன்ற மொழிபெயர்ப்புகளை இதில் வெளியிடுகிறோம். நண்பர்கள் தங்களது மொழிபெயர்ப்புகளை அனுப்பலாம். அல்லது இதில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளையும் திருத்தலாம். இந்த கூட்டமுயற்சியால் “பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை” தமிழில் கொண்டுவருவது நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் பயனுடையதாக அமையும்.

சிற துளிகள்தான் பெருவெள்ளத்திற்கு காரணம் என்பது நமது மூதாதைகள் கண்ட முதுமொழித்தானே….

அன்புடன்

எட்டுத்திக்கும்

 

 ஏ. கே. ராமானுஜன் – தமிழின் “அகநிலப்பரப்பை” புறத்திற்கு எடுத்துச் சென்றவர்.

அகம் மற்றும் புறப்பாடல்கள் ஆங்கிலத்தில்..

  

  பின் குறிப்பு -நானும் நணபர் நதியலை அவர்களும் தளமேலாண்மை பொறுப்பை எற்றுக் கொண்டிருந்தாலும், அதை சிறப்பற நடத்திச் செல்வது பதிவர்களான உங்கள் கைகளில்தான்.

– ஜமாலன் – 28/07/2009

Read Full Post »

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

“இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே”

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை… சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்… இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது…

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட ‘அன்புடன்’ கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.

போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை – வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் ‘அன்புடன்’ உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* – பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை – கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** – பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* – இயக்கச்சுவை

இது ஒலி – ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 – சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 – கவிதைப்போட்டி

படம் : 01

படம் : 02

படம் : 03

படம் : 04

படம் : 05

படம் : 06

படம் : 07

படம் : 08

படம் : 09

படம் : 10

Read Full Post »