Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கரிகாலன்’ Category

காற்று செல்லும்
திசையில் பறக்கிறது
ஒரு இலை
ஒரு இறகு
மரமோ பறவையோ
தன் இழப்பை
பொருட்படுத்துவதில்லை

**********************

நேற்று ஏற்பட்ட
மனத்தாங்கலை
செடிக்கு நீர்பாய்ச்சிய
இடத்தில் விட்டேன்
அக்கேடு பின் உரமாகிவிட்டது
மனதிலேற்பட்ட வெற்றிடத்தில்
அச்செடி தன் புதிய இலையை
துளிர்த்தது.

– கரிகாலன் (தொகுப்பு – ஆறாவது நிலம்)

Read Full Post »