விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
– அப்துல் ரகுமான் (தொகுப்பு – சுட்டுவிரல்)
Surprise!
Just yesterday, I visited your blog and thought of sending this poem. I did not do because of the unavailability of Tamil font.
Today I find your post with a surprise. Very Good poem.Thanks for posting.
One more poem ‘Iru pakkangkaL’, will you publish please?
இரு பக்கங்கள்
————–
காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்
தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்
விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்
கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்
புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்.
– அப்துல் ரகுமான் (தொகுப்பு – சுட்டுவிரல்)
Thanks for a quick reply. However, it worth for a post than in comment box -))!
என்ன ஒரு இயல்பான கவிதை…நெகிழ செய்கிறது….வார்த்தைகளும் அர்த்தங்களும்…நல்ல கவிதைகளின் தொகுப்புக்கு நன்றி…நதியலை
http://www.vidukathai.wordpress.com
கண்ணதாசனின் ‘நீ மணி; நான் ஒலி’ கவிதையும் இதை ஒத்த கருத்தோடு எழுதப்பட்டதுதான்.
தகவலுக்கு நன்றி ரங்கா.
i dont have a words to tell about this poem.
Simply superb.
i want ‘Paal veethi’ poets
***************அப்துல் ரஹ்மான்
அய்யா அவர்களே !தங்கள் நலம் அருய ஆவல்.. உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு ஒரு ஏக்கத்தை கொடுக்கிறது.. நீர் வாழ்க பல ஆண்டுகள்.********************************
*****************அப்துல் ரஹ்மான்
அய்யா அவர்களே !தங்கள் நலம் அரிய ஆவல்.. உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு ஒரு ஏக்கத்தை கொடுக்கிறது.. நீர் வாழ்க பல ஆண்டுகள்.****************************
*****************அப்துல் ரஹ்மான்
அய்யா அவர்களே !தங்கள் நலம் அரிய ஆவல்.. உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு ஒரு ஏக்கத்தை கொடுக்கிறது.. நீர் வாழ்க பல ஆண்டுகள்.****************************
thank you for taking efforts in publishing such wonderful poetry on ur blog..
நன்றி நிர்மலா
wonderful.thanks a lot.
தங்களால் இதற்கு அர்த்தம் கூற இயலுமா