வெறும் கனாவோட மட்டும் காலம் தள்ள முடியாதுன்னு உனக்கு ஏன் புரியலை. கனா இல்லாத வாழ்க்கையே கிடையாது. கனவு சுகம் தான். சுய நினைவும் வேணும். சுயநினைவோட இருக்கிற போதுதான் சுகமான கனா சாத்தியமாகும்.
*************
அனைத்தையும் விட்டு ஓடுவது என்பது எளிதல்ல, அறுத்துக் கொள்வது என்பது வேடிக்கை அல்ல. வலி மரணவலி, சகித்துக்கொண்டே மறப்பதற்கு உரம் வேண்டும், நிதானம் வேண்டும். என்றும் எதிராளியை குற்றம் சாட்டாத அமைதி வேண்டும். தத்தம் கருமமே கட்டளைக் கல் என்று தெரிய வேண்டும்.
*************
பின்னூட்டமொன்றை இடுக